Thursday, September 15, 2016

போதுமோ இந்த நகை????????




மேலே உள்ளது வாட்ஸப்பில் வந்த படம்.

ஏழை மக்கள் அதிகம் உள்ள நாடு என்று சொன்னால் அப்படத்தை பார்க்கும் யாராவது நம்புவார்களா?

நகைக்கடைக்குள் பெண்களை உட்கார்த்தி வைத்தது போல இருக்கிறது. மனைவியின் உடலை பனிரெண்டு கிலோ மீட்டர் தோளில் சுமந்து கொண்டு போன தேசத்தில்தான் நகைகளை சுமக்க முடியாமல் திணறும் காட்சியைப் பார்க்கிறோம்.

பல் உள்ளவர்கள் பக்கோடா சாப்பிடுகிறார்கள் என்று சிலர் சொல்லலாம். ஆனாலும் இது ரொம்பவே ஓவர். பணம் உள்ளவர்கள் செய்யும் ஆடம்பரம் அடுத்தவர்களையும் அகலக்கால் எடுத்து வைக்க தூண்டுகிறது. இன்றைய திருமணங்கள் இப்படித்தான் மாறியிருக்கின்றன.

பின் குறிப்பு : இப்பதிவிற்கு அப்பெண்கள் அணிந்துள்ள நகைகள்தான் முக்கியம் என்பதால் முகங்களை மறைத்து விட்டேன்.
 

2 comments:

  1. "இப்பதிவிற்கு அப்பெண்கள் அணிந்துள்ள நகைகள்தான் முக்கியம் என்பதால் முகங்களை மறைத்து விட்டேன்" - அருமை!

    ReplyDelete
  2. ஏழை மக்கள் அதிகம் உள்ள நாடு என்று சொன்னால் அப்படத்தை பார்க்கும் யாராவது நம்புவார்களா?

    மிக அருமையாக சொன்னீர்கள்.
    மற்றொன்று, தங்க நகை போடுவதையே பெண்ணின் பெருமை என்று நம்பும் பெண்கள் கொண்ட நாடு இந்தியா என்பதும் அவமானம்.

    ReplyDelete