Tuesday, June 9, 2015

அந்த விழா இன்றோ, இந்த மழை அன்றோ

 http://media.dinamani.com/2014/10/27/rain.jpg/article2495439.ece/alternates/w460/rain.jpg


அதற்கு  பதிவர் திரு தருமி அவர்கள் "அடுத்த வாரம் பார்ப்போம்" என்று பின்னூட்டம் எழுதியிருந்தார்.

கடந்த சனிக்கிழமையன்று திரு விசுவாசம் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் திரு தருமி அவர்களை அறிமுகம் செய்து வைத்த போது அவர் எழுதிய பின்னூட்டம்தான் நினைவிற்கு வந்தது. ஏனென்றால் அப்போது வேலூர் பிராண்ட் வெயில் அடித்துக் கொண்டிருந்தது.

எந்த கேள்வியை அவர் கேட்கக் கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தேனோ, "எங்கே மழையை காணோம்" என்ற அந்த கேள்வியை அவர் உணவருந்தும் வேளையில் கேட்டே விட்டார்.

கொஞ்சம் சமாளித்துக் கொண்டு "இரண்டு நாள் முன்பாகக் கூட நல்ல மழை. இன்றுதான் வெயிலடிக்கிறது" என்று சொல்ல அவர் பெருந்தன்மையாக "it is coming on and off" என்று சொல்லி விட்டு அதன் பிறகு அது பற்றி எதுவும் பேசவில்லை.

இன்று பாருங்கள். மாலை ஏழு மணிக்கு தொடங்கிய மழை இன்னும் இதோ பதினோரு மணிக்குக் கூட நிற்காமல் தொடர்ந்து பெய்து கொண்டு இருக்கிறது.

அன்று நடந்த விழா இன்று நடந்திருந்தாலோ
இல்லை
இன்று பெய்யும் மழை அன்று பெய்திருந்தாலோ

வேலூருக்கு எவ்வளவு நல்ல பெயர் கிடைத்திருக்கும்?
 

 

2 comments:

  1. வேலூருக்கு என்றுமே நல்ல பெயர்தான் நண்பரே

    ReplyDelete
  2. இங்கும் நல்ல மழை சார் நேற்று.

    ReplyDelete