Sunday, June 8, 2014

இதெல்லாம் நியாயமே இல்லை மிஸ்டர்

இரவு பத்தே கால மணிக்கு ஒரு நிகழ்ச்சியை முடித்து விட்டு புழுக்கத்தோடு வியர்வையில் நனைந்து கொண்டு வாகனத்தில்
வரும் போது வேலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் போர்ட் வெப்ப அளவு
94 டிகிரி பாரன்ஹீட்  என்று காண்பிக்கிறது.

இதெல்லாம் நியாயமே இல்லை திருவாளர் சூரியன் அவர்களே,
நீங்கள் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து மூன்றரை மணி நேரம்
ஆன பின்பும்  உங்கள் வெப்பத்தை மட்டும் தக்க வைத்துக் கொள்வது
சரியே இல்லை.

அப்படி என்ன உங்களுக்கு வேலூர் மீது பாசம்?

இந்த பரிவை வேறு எங்காவது காண்பியுங்களேன்.

11 comments:

  1. அய்யா,

    //வேலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் போர்ட் வெப்ப அளவு
    94 டிகிரி பாரன்ஹீட் என்று காண்பிக்கிறது.

    இதெல்லாம் நியாயமே இல்லை திருவாளர் சூரியன் அவர்களே,
    நீங்கள் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து மூன்றரை மணி நேரம்
    ஆன பின்பும் உங்கள் வெப்பத்தை மட்டும் தக்க வைத்துக் கொள்வது
    சரியே இல்லை.//

    பின்ன வேறென்ன வெப்பம் காட்டும்?

    சராசரி மனித உடல் வெப்ப நிலையே 98.4 ஃபேரன்ஹீட் டிகிரி , 94 என்பது மனித உடலுக்கு ரொம்ப குளிர்ச்சி தான்.

    வெயில் காலத்தில் இரவில் 94 டிகிரி ஃபேரன்ஹீட் காட்டுவது ஒன்றும் தப்பேயில்லை, கொஞ்சம் பொது அறிவையும் வளர்த்துக்கோங்க அவ்வ்!

    ReplyDelete
  2. enna perunthanmai sir.....

    ReplyDelete
  3. வாங்க வவ்வாலாரே, மனிதனின் உடலில் இருக்க வேண்டிய வெப்ப அளவு பற்றி நிறைய தெரிந்து வைத்துள்ள, பொது அறிவு மிக்க மேதையாகிய உங்களுக்கு Normal Atmospheric Temperature, Room Temperature எவ்வளவு இருந்தால் நன்றாக இருக்கும் என்று உங்கள் அறிவுலக ஆசான்கள் சொல்லித் தரவில்லையா? சண்டியர்தனம் செய்ய வேண்டும் என்பதற்காக அபத்தமாக உளறிக் கொண்டிருக்காதீர்கள்.

    ReplyDelete
  4. ராமன் அவர்களே! என்னுடைய" அண்ற்றாய்டு" கை பேசியில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வெப்பம் காட்டும் அமைப்பு உள்ளது ! வெள்ளிக்கிழமை கூடுதல் வேப்பம் 119* ! சனிக்கிழமை 117* ! ஞாயிறு அன்று 118* ! நேற்று இரவு 10.30 மணிக்கு 101 * ! இன்ரு காலை 6-30 மணிக்குகுளிக்கும் பொது வென்னீராய் குழாய் நீர் சுட்டது ! 8மணிக்கு மெல் என்றால் உலை நீராகிவிடும் ! என் வீட்டில் இரண்டு "கூலர்கள்" உள்ளன ! படுக்கை அறையில் A.C உள்ளது ! கதவை முடி உள்ளெதான் வசிக்கிறோம் ! கண்ணடி சன்னல் வழியே பார்த்தால் நம்ம கயத்தாரு
    ஸ்ரீவைகுணடம். ஆழ்வார்குறிச்சி ,உழைப்பளி தமிழர்கள் ,நடமடும் தள்ளுவண்டியில் எரியும் அடுப்பில் ,தொசை, இட்டிலி,சுடச்சுட விற்றுக் கொண்டு செல்கிறார்கள் ! ஜார்கண்டு உழைப்பாளிகள் உடம்பு பூராவும் மூடிக்கொண்டு கண்கள் மட்டும் தெரிய சைக்கிள் ரிக்ஷாவை வலித்துக்கொண்டு செல்கிறார்கள் ! நாகபுரியில் நிலமை இது ! பத்ராசலம், ராமகுண்டம் மக்கள் நிலை !" வௌவ்வால்"களை இங்கே வரச்சொல்லுங்கள் ! வெப்பம்,உழைப்பு பற்றி நேரடி அனுபவம் கிடைக்கும் ! வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன். ( மணி 9 ஆகிவிட்டது ! வெப்பம் 103* ! இன்று 116 வ்ரை போகலாம் என்பது அனுமானம் )

    ReplyDelete
  5. எல்லா ஊர்லயும் இதே நிலைதான்.

    ReplyDelete
  6. அய்யா,

    //Normal Atmospheric Temperature, Room Temperature எவ்வளவு இருந்தால் நன்றாக இருக்கும் என்று உங்கள் அறிவுலக ஆசான்கள் சொல்லித் தரவில்லையா?//

    இந்தியா மாதிரி உப வெப்ப மண்டல பிரதேசத்தில் Normal Atmospheric Temperature, Room Temperature உம் எப்பவும் கூடத்தான் இருக்கும்னு வில்லேஜ் விஞ்சானியான உங்களூக்கு தெரியாமப்போச்சே அவ்வ்!

    வழக்கமான வெப்ப நிலையைக்காட்டினாலும் ஏன் எங்க ஊருக்கு மட்டும் இப்படினு அபத்தமாக பொலம்புறது நீங்க தான்!

    வழக்கமாகவே வேலூரில் வெயிலின் தாக்கம் கூட தானே இருக்கும்? சென்னையில் இரவு 10 மணீக்கு 92 டிகிரி ஃபேரன்ஹீட், இதுக்கே கடல் இருக்கு!!!

    குறைவான வெப்பநிலைய பார்க்கணும்னா நைட் 12 மணிக்கு போய் பாருங்க 84-86 ஃஃபேரன்ஹீட் காட்டும் ,பார்த்து சந்தோஷமா சிரிச்சுட்டு வாங்க அவ்வ்!
    -----------

    காசியபர்,

    //" வௌவ்வால்"களை இங்கே வரச்சொல்லுங்கள் ! வெப்பம்,உழைப்பு பற்றி நேரடி அனுபவம் கிடைக்கும்//

    அய்யா நான் கோடையில் வெப்பமாக இருப்பது சகஜம் தான் என சொல்லி இருக்கேன் ,அய்யோ வெப்பமாக இருக்கேனு பொலம்புறது உங்க தோழர் தான் ,அவருக்கு காட்டுங்க அவ்வ்.

    மேலும் நாகபுரியில் இனிமே தான் வெப்பம் அதிகம் ஆகும், கடக ரேகை அவ்விடம் வழியே(அருகே) தான் செல்கிறது, ஜீன் 21 ( summer solstice)அன்று கடக ரேகைக்கு செங்குத்தாக சூரியன் வரும், எனவே அன்று உச்ச வெப்பம் காணலாம் ,எஞ்சாய்!!!

    ReplyDelete
  7. காஷ்யன் தோழர், வருந்துகிறேன். பதிவுலக சண்டியர் என்று தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டு எல்லோரையும் சீண்டுவதை மட்டுமே பிழைப்பாகக் கொண்டவர் வவ்வால். அவரைப் போன்ற அதி மேதாவிகளுக்கு மற்ற அனைவரும் அடி முட்டாள்கள். மனித உணர்வுகளை கொஞ்சமும் மதிக்கத் தெரியாத வவ்வால்களுக்கு பதில் சொல்வதில் இனி நான் என் நேரத்தை விரயம் செய்யப் போவதில்லை. நீங்களும் உங்களின் பொன்னான நேரத்தை விரயம் செய்யாதீர்கள்.

    இவர்களை புறக்கணிப்பதே உத்தமம் என்ற முடிவிற்கு நான் வந்துள்ளேன்.

    வலையுலக சாபக்கேடு இவர்கள்

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. வவ்வாலின் விதண்டாவதக் கருத்துக்களை வெளியிட எனது பக்கம் ஒன்று குப்பைத் தொட்டியல்ல

    ReplyDelete
  10. cool ... cool

    Raman sir become too hot....because of sun god too much blessings.

    vavval always informative but tatcative style of writing....let us enjoy that style also.

    Regards

    Seshan.

    ReplyDelete