Thursday, June 5, 2014

அச்சுறுத்தும் மழை இன்று

நேற்று வரை 
பரவசம் தந்தது.
வசந்தத்தை வரவேற்கும்
மேளச்சத்தமாய் 
கேட்டிருந்தது இடியோசை.
வாழ்வின் ஒளியாய்
மின்னலும் இருந்தது.
வீதியில்  ஓடுகிற 
நீரைக் கூட
வெள்ளமாய் உணர்ந்தோம்.
மண்ணில் ஊறி
தாகம் தணிக்கும்
தேவதையாய் போற்றினோம்.

இன்றும் பெய்கிறது,
இன்னமும் பெய்கிறது
பரவசம் தந்த மழை
இன்று
பயமும் தருகிறது.

மழலையின் மரணம்
தந்த மனதின் ரணம்.

1 comment:

  1. I enjoyed your ""காய்ச்சல் வந்தால் தவறில்லை"" on that day.
    Today i share the same feel as per these lines""இன்றும் பெய்கிறது,
    இன்னமும் பெய்கிறது
    பரவசம் தந்த மழை
    இன்று
    பயமும் தருகிறது.

    மழலையின் மரணம்
    தந்த மனதின் ரணம். ""

    ReplyDelete