Thursday, June 19, 2014

பெண்களின் விடுதலை வேட்கையை விவரிக்கும் சில திரைப்படப் பாடல்கள்



என்னுடைய மெமரி கார்டில் இந்த பாடல்கள் எல்லாம் வரிசையாக ஒலிப்பது போல வைத்துள்ளேன். இவை எல்லாவற்றுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

சவாலே சமாளி படத்தில் ஜெயா  பாடும் பாடல் சிட்டுக்குருவிக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் எதற்கு தேவையற்ற கட்டுப்பாடு என்று கேட்கும்.

காற்றுக்கு இல்லாத  வேலி பெண்களுக்கு எதற்கு என்று இங்கே சுஜாதா https://www.youtube.com/watch?v=RSICeyfMSO0 கேள்வி கேட்பார்..

பெண்களுக்கானது இந்த உலகம் என்று ராஜாவின் இசையில் பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவில் https://www.youtube.com/watch?v=cmQZ9GMt71M மிகவும் அழகானது என்று ஷோபா சொல்லிடுவார்.

காதல்வயப்பட்ட பெண்ணின் ஆனந்த ராகம் எப்படி இருக்கும் என்பதை இளையராஜா வயலினும் புல்லாங்குழலும் கொஞ்ச கொஞ்ச உற்சாகமாய் சாந்தி கிருஷ்ணா https://www.youtube.com/watch?v=_j3goSKLjaw வலம் வந்து சொல்வார்.

மழையில் நனைந்து தங்களின் உரிமையை நிலைநாட்டும்https://www.youtube.com/watch?v=1hC7mpoBxdo ரேவதி இங்கே.

கூண்டிலிருந்து வெளியேறும் பறவையின் மகிழ்ச்சியை https://www.youtube.com/watch?v=NYFYZW7sw5Qபாடலோடு உணர்த்துவார் அதே ரேவதி.

இவையெல்லாம் என்னைக் கவர்ந்த பாடல்கள். கேளுங்கள், ரசியுங்கள். உங்களின் ரசனைக்குரிய பாடல்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆனால் பெண் விடுதலையை ஒரு நாளிதழ் எப்படி கொச்சைப்படுத்திப் பார்த்தது என்ற வேதனையான நிகழ்வும் இருக்கிறது.

அந்த சம்பவத்தை பின்பு பதிவு செய்கிறேன்.

No comments:

Post a Comment