Wednesday, June 4, 2014

கவிஞன் வாக்கு பொய்ப்பதில்லை. ஜெ வாழ்க





கடந்த வாரம் வலைச்சரம் இணையத்தின் ஆசிரியர் பொறுப்பேற்று செயல்பட்ட போது ஒரு நாள் கவிதை என்ற தலைப்பில் பதிவெழுதினேன். அன்று பலரின் கவிதைகளையும் பகிர்ந்து கொண்டேன். அந்த பதிவின் இணைப்பை கீழே தந்துள்ளேன்.

அன்றைய இடுகையை அன்று காலையில் பார்த்த செய்தியோடு கீழ்க்காணும் கவிதையோடு தொடங்கியிருந்தேன்.

இனி மின் வெட்டு இல்லை
என்றோர் தலைப்புச் செய்தி.

ஆதவன் வந்திடாத
முன் காலைப் பொழுதில்

இருளும் புழுக்கமும்
சூழ்ந்த அறையில்

கொட்டும் வியர்வையில்
கண்களைச் சுருக்கி

படித்து முடித்தேன்
அச்செய்தியை.

இப்போது இங்கே
மின் வெட்டு.

ஒரு கவிஞனின் வாக்கு பொய்க்கக் கூடாது என்பதற்காக ஜூன் மாதம் முதல் தேதி முதல் மின் வெட்டு இருக்காது என்று தான் சொன்ன உறுதி மொழியைக் கூட பொருட்படுத்தாமல் முன்னை விட கூடுதலாக மின்சாரத்தை வெட்டி வரும் புரட்சித்தலைவி அம்மா ஜெ வாழ்க வாழ்க.

வலைச்சர இணைப்பு இதோ

3 comments:

  1. எங்க ஊர்லயும் இதே நிலைதான்

    ReplyDelete
  2. எல்லா ஊர்லயும் இதே நிலைமைதான் மேடம்

    ReplyDelete