Saturday, June 28, 2014

அவர் குடிகாரன் என்பது தமிழருவி மணியனுக்கு முன்பு தெரியாதா?




தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டத்திற்கு மதுவாடையுடன் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அழைக்க மாட்டோம்.
- தமிழருவி மணியன்


இது   இன்றைய செய்தி.

ஜாதிவெறிக்கு எதிராக நடத்தப் போகும் போராட்டத்திற்கு 
எப்போதும் ஜாதிய உணர்வோடு இருக்கும் மருத்துவர் ஐயாவை
அழைக்க மாட்டோம் என்று நாளை தரகுப்புயல் கூறுவதற்கான
வாய்ப்பு இருக்கிறது.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடத்தப் போகும் போராட்டத்தில்
பங்கேற்க மதவெறியோடு செயல்படும் பாஜகவை அழைக்க
மாட்டோம் என்று நாளை மறுநாள் அவர் கூறலாம்.

கல்விக் கட்டணம் என்ற பெயரில் அடிக்கப்படும் கொள்ளைக்கு
எதிரான போராட்டத்திற்கு கல்வி வியாபாரிகள் பச்சைமுத்துவையும்
ஏ.சி.சண்முகத்தையும் அழைக்க மாட்டோம் என்று மற்றொரு நாள்
சொன்னாலும் வியப்பில்லை. 

அன்றன்றைக்கு ஏதாவது சொல்லி தன்னை யோக்கிய சிகாமணியாக
காண்பித்துக் கொள்ள ஆசைப்படுகிறார் தரகுப்புயல் த.அ.ம.


மது விலக்குப் போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூட தகுதியில்லாத
விஜயகாந்தின் தலைமையில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி
வைக்க ஏன் தொங்கிக் கொண்டிருந்தாராம்? இவர்கள் அனைவரையும்
ஒரே கூட்டணியில் இணைக்க ஏன் பிரம்மப் பிரயத்னம் செய்து
கொண்டிருந்தாராம்?

வெட்கம் கெட்ட மனிதர்கள் என்று யாராவது பட்டியல் போட்டால்
அதில் முதலிடம் தரகுப்புயலுக்குத்தான். 

4 comments:

  1. தமிழருவிக்கு கொஞ்ச நாளாக மூளை வேலை செய்யவில்லை போலும்!

    ReplyDelete
  2. அற்பன் ... அதை தவிர வேறு சொல் பொருந்துமா ?

    ReplyDelete
  3. Tamilaruvi Manian cannot be blamed.When he initiated the Rainbow Alliance he had clearly told that it was only a temporary arrangement for the Lok Sabha polls 2014.

    ReplyDelete
  4. Sorry Mr Selvakumar, Read his earlier statements. He said he is forming this alliance only for 2016 assembly elections

    ReplyDelete