Tuesday, June 4, 2013

இந்த வயதில் இப்படி ஒரு விளம்பரம் கலைஞருக்கு அவசியமா?





வயதான காலத்தில் ஏராளமான குடும்பப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் ஒரு முதியவர் பற்றி எதற்கு எழுத வேண்டும் என்று சமீப காலமாக நான் கலைஞர் பற்றி எழுதவில்லை.

ஆனால் இந்த செய்தி என்னை எழுத வைத்து விட்டது. அவரது பிறந்த நாளுக்கு போப்பாண்டவர் வாழ்த்து தெரிவித்தார் என்று மீண்டும் மீண்டும் கலைஞர் டி.வி யில் செய்தி வெளியிட்டார்கள். போப்பாண்டவர் என்ன இந்திய நாட்டைச் சேர்ந்தவரா? ஏதோ ஒரு லத்தீன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் எதற்கு வாழ்த்து அனுப்ப வேண்டும்.

ஒரு வேளை இப்படி இருக்கலாம்.

சில கோயில்களுக்கு பணத்தை மணி ஆர்டர் அனுப்பினால், ரசீதோடு விபூதி, குங்குமம் அனுப்பி வைப்பார்கள். அது போல பணம் கட்டி வாழ்த்து வரவைத்திருக்கலாம், அல்லது பேராயர் எஸ்ரா சற்குணம் போன்ற இவரது ஆதரவாளர்களை வைத்து வரவழைத்திருக்கலாம்.

ஜெயேந்திர சரஸ்வதியிடமிருந்து வாழ்த்துச் செய்தி வந்திருந்தால் அது இயல்பானது. அவர் மீதான வழக்கை நீர்த்துப் போகச்செய்ததற்கு நன்றியோடு நடந்து கொள்ள வேண்டுமல்லவா?

தொன்னூறு வயதில் கலைஞருக்கு எதற்கு இந்த தேவையில்லாத விளம்பரம்? ஒபாமாவோடு பேசுவேன், ஹில்லாரியோடு பேசுவேன், பில் கேட்ஸோடு பேசுவேன் என்று அண்புமணி ராமதாஸ் பேசிய உடாண்ஸைப் போலவே இந்த போப்பாண்டவர் வாழ்த்தும் உள்ளது.

5 comments:

  1. சில கோயில்களுக்கு பணத்தை மணி ஆர்டர் அனுப்பினால், ரசீதோடு விபூதி, குங்குமம் அனுப்பி வைப்பார்கள். அது போல பணம் கட்டி வாழ்த்து வரவைத்திருக்கலாம்\\ rolling on the floor and laughing

    ReplyDelete
  2. Dear Sir,
    Nobody is perfect in this world. If this publicity gives some pleasure to the great SOCIAL REFORMER , POLITICAL LEADER, ,let him enjoy this at his age. I think you are trying get a publicity by making your comment with your prejudiced motive.
    You can certainly share some better thoughts and information which will be useful to the society.
    I read your blog with some expectations.

    ReplyDelete
  3. உங்கள் உள்ளத்தில் ஆழப்பதிந்திருக்கும் கலைஞர் மீது உள்ள வெறுப்பு இப்படி உண்மையை திரித்து பேச வைக்கிறது.புதிய போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது கலைஞர் வாழ்த்து தெரிவித்திருந்தார்.போப் பதிலுக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்பியிருக்கிறார்.

    ReplyDelete
  4. //அண்புமணி ராமதாஸ் பேசிய உடாண்ஸைப் போலவே // உங்களுக்கு எங்க இந்த வன்மம்.

    ReplyDelete
  5. ராமன் சார் , அன்புமணி பேசியது உடான்ஸ்னு எப்பிடி கண்டுபிடிச்சீங்க , நீ ஏற்றுக்கொண்டவர்களைத்தவிற மற்ற யாரும் இந்த நாட்ல நல்லவங்களாகவோ அறிவாளிகளாகவோ இருக்கக்கூடாதுன்னு நெனைக்கிறீங்க அப்பேர்பட்ட அப்பாட்டக்கறா நீங்க ? மா. குமார் , விழுப்புரம் .

    ReplyDelete