Friday, June 28, 2013

ஓவர் பில்ட் அப்பால் அம்பலப்பட்டு நிற்கும் ராம்போ நரேந்திர மோடி




https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/p480x480/1016503_659614957386053_1211314604_n.jpg
அழிவில் அரசியல் ஆதாயம் தேடுவது என்பது முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை. வெள்ளச் சேதத்தை மடித்து கட்டிய வேட்டியோடு பார்வையிடும் அமைச்சர்களை எத்தனை முறை பார்த்திருக்கிறோம்.

அதே போல ஸ்டண்ட் அடிக்க நரேந்திர மோடியும் உத்தர்கண்ட் வந்தார். சென்றார். ஆனால் அறிக்கைகள் வந்தன. 15,000 குஜராத்திகளை அவர் மீட்டுச் சென்றார் என்பது அந்த அறிக்கைகளின் சாராம்சம். சங் பரிவார கும்பல்களின் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் “ பார்த்தாயா எங்கள் தலைவரின் புஜபல பராக்கிரமத்தை என்று விசில் அடித்து உற்சாகக்குரல் எழுப்பி “ எங்கள் தலைவரை விட வேறு யார் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் இருக்கிறார்கள் “ என்று முழங்கோ முழங்கு என்று முழங்கினார்கள். எங்கே அந்த சோம்பேறி ராகுல் காந்தி என்று கேட்கவும் அவர்கள் தவறவில்லை.

15,000 பேரைக் காப்பாற்றிய நரேந்திர மோடி பிரதமரானது போலவே சங் பரிவார அடிப்பொடிகள் எழுதிக் கொண்டிருந்த போது அவர்கள் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

ராணுவமும் விமானப்படையுமே மீட்புப் பணிகளில் மிகவும் சிரமப் படும்போது நரேந்திர மோடி எப்படி ஐயா 15,000 பேரைக் காப்பாற்றினார் என்ற கேள்வி முதலில் வந்தது. கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் ஏன்யா இப்படி கதை  விடங்கறீங்க என்ற கேள்விக்கு பதிலே இல்லை.

அடுத்த கேள்வி தேசிய ஜனநாயகக் கூட்டணியில்க் மிஞ்சியிருக்கிற சிவசேனை “ அதெப்படி குஜராத்திகளை மட்டும் நரேந்திர மோடி காப்பாற்றலாம், பிரதமர் பதவிக்கு ஆசைப்படுபவர் மற்ற மாநில மக்களை கண்டு கொள்ளாமால் இருப்பது  தகுமா “ என்று கேட்டது

பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் மிகவும் புத்திசாலித்தனமாக அப்படியா? நிஜமாகவா? என்று கேட்டு தப்பித்து விட்டார்.

நான் ஒன்னும் பதினைந்தாயிரம் பேரை காப்பாத்தினதா சொல்லவே இல்லையே என்று இப்போது  மோடியும் பல்டி அடித்து விட்டார். நான் சும்மா டீயும் ரொட்டியும் கொடுக்கப் போனேன் என்ற ரீதியில் அவர் சமாளித்து விட்டார். ஆனால் முதலில் இந்த செய்தியை வெளியிட்ட ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை மட்டும் நிசமாவே நரேந்திர மோடி அவ்வளவு பேரை காப்பாத்தான் செஞ்சாரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கொஞ்சம் அளவா பொய் சொல்லியிருந்தா, இப்படி அசிங்கப் பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஓவரா பில்ட் அப் செஞ்சதால இப்ப அசடு வழிய வேண்டியிருக்கிறது.

இதிலே முக்கியமான செய்தி என்னவென்றால்

குஜராத்தின் வளர்ச்சி பற்றி இவர்கள் பீற்றிக் கொள்வதில் எவ்வளவு சதவிகிதம் உண்மை? எவ்வளவு சதவிகிதம் பில்ட் அப் ?

இவ்வளவு பொய் சொல்பவர் பிரதமரானால் நாடு தாங்குமா?

பின் குறிப்பு : போட்டோவுக்கு ஸ்டைலாக போஸ் கொடுப்பதில்
ராம்போ மோடியை மிஞ்ச யாருமில்லை



1 comment:

  1. read this
    http://economictimes.indiatimes.com/opinion/comments-analysis/narendra-modi-led-rescue-efforts-in-uttarakhand-are-not-publicity-gimmicks/articleshow/20772558.cms

    ReplyDelete