Sunday, June 9, 2013

தொடரும் வாக்கிங் கொலைகள்

மர்ம தேசமாக மாறிப்போய் வருகிற, மம்தாவின் ராஜ்யத்தில்
இன்று காலை ஒரு வாக்கிங் கொலை  நடந்துள்ளது.

பர்தமான் மாவட்ட சி.ஐ.டி.யு செயலாளரும் 
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட்
கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான 
தோழர் திலீப் சர்க்கார், இன்று காலை நடைப் பயிற்சி
செல்லும் போது திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால்
கொல்லப்பட்டுள்ளார்.

காலை நடைப்பயிற்சி செல்லும் மார்க்சிஸ்ட் கட்சித்
தலைவர்களை குறிவைத்து தாக்கும் பழக்கம் 
தொடங்கியுள்ளது.

பர்த்மான் மாவட்டத்தில் மட்டும் இது மூன்றாவது கொலை.

குற்றவாளிகளை லாக்கப்பிலிருந்து வெளியே எடுத்துச்
செல்லும் முதலமைச்சர் உள்ள மாநிலத்தில் வேறு என்ன
நடக்கும்?

பேயரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரம்தானே?
 

No comments:

Post a Comment