Friday, June 7, 2013

கரெக்டாதான் சொல்லியிருக்காரு கண்ணதாசன்

முகநூலில் நான் பார்த்து ரசித்த
கவியரசு கண்ணதாசன் அவர்களின்
கவிதை. என் அபிமான நடிகர்
சிவாஜி கணேசன் பற்றி எழுதியது.

கண்டறிந்து பதிவிட்டதற்கு 
நண்பர் ஷாகூல் ஹமீது 
அவர்களுக்கு நன்றி



எதை எழுதுவது ;
எதை விடுவது ?
இமய மலையின் எந்த
மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி
அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத்
தொண்ணூறு வகையாகக்
காட்டும்
உன்னத நடிப்பைச்
சொல்வேனா ?
அவரைப்போல் இதுவரை
ஒருவர் பிறந்த தில்லை;
இனி பிறப்பார் என்பதற்கும்
உறுதி இல்லை !
இது உண்மை
உலகறிந்ததே !

–கவியரசு கண்ணதாசன்

1 comment: