Thursday, June 27, 2013

எப்படித்தான் இது சாத்தியமோ?

சமீபத்தில் நான் மிகவும் ரசித்த
ஒரு கவிதை.


சாம்பல் நிற புறா
 பச்சைநிற பொன்வண்டு 
சன்னலில்வந்தமரும் சிட்டுக்குருவி
மாதுளைப்பூவின் தேன்சிட்டு 
தோகைநிறைந்த மயில் 
ஒரேஒரு பச்சைக்கிளி 
எந்த ஒன்றை 
பரிசாகதருவேன் 
என்பிரியமான தோழி பட்டாம்பூச்சிக்கு?


இந்த கவிதையை எழுதியது
யார் தெரியுமா?

சற்று கீழே வாருங்கள்




























இதோ இவர்தான்



மார்க்சிஸ்ட் கட்சியின்
சட்டமன்ற உறுப்பினர்
தோழர் பாலபாரதி
எழுதிய கவிதை அது.

கட்சிப்பணி, சட்டமன்ற உறுப்பினர் பணி
இதற்கு மத்தியில் கவிதைப் பணிக்கும்
எப்படித்தான் நேரமிருக்கிறதோ!

பிரமிக்க வைக்கிறீர்கள் தோழர்

 








1 comment:

  1. அருமை... திட்டமிடுதலை அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்...

    ReplyDelete