Tuesday, June 25, 2013

எப்படி மனம் வந்தது அந்த பெரிய மனிதருக்கு?

மறைந்த நடிகர் மணிவண்ணன் பற்றி நடிகர் இயக்குனர்
பார்த்திபன் கூறியது பற்றி இப்போதுதான் முகநூலில்
பார்த்தேன். உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து போனது.

இப்படிப்பட்ட ஒரு மனிதரைப் பற்றி தரக்குறைவாக,
அதுவும் ஆயிரக்கணக்கானவர்கள் படிக்கும் ஒரு
வார இதழில் எழுத அந்த பெரிய மனிதர் பாரதிராஜாவிற்கு
எப்படித்தான் மனம் வந்ததோ?

இதோ பார்த்திபன் எழுதியது...

"நான் டப்பிங் பேசிக் கொண்டிருந்த காலத்தில்...

ஒரு கதாபாத்திரத்திற்கு என் குரல் பொருத்தம் என முடிவு செய்து ரூ 500 முன் பணம் கொடுத்தார்கள். அதற்கு 10% கமிஷன் யாருக்கோ கொடுக்க வேண்டும் என்ற சூட்சமம் அறியாத நான், டீ கடன்,பன் கடன்,டிபன் கடன் இப்படி எல்லாக் கடன்களையும் அடைத்து விட்டு டப்பிங் அரங்கிற்கு சென்றேன். இன்றே அந்த கேரக்டருக்கு பேசி முடித்து விட்டால் மீதி 1500 கிடைக்கும் அதில் தீபாவளியை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்ற 1000 கற்பனையில் உதடு தானாய் விசிலியது.

ஆனால் எனக்கு பதில் அந்த கேரக்டருக்கு வேறு யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். கேட்டால் என் குரல் பொருந்த வில்லையாம்(10%)!
கலங்கிய படி வாசலில் நின்றிருந்தேன்.

அப்படத்தின் இயக்குனர் வந்தார். விஷயம் அறிந்து என்னை சமாதானப் படுத்தினார். அடுத்த படத்தில் டப்பிங் வாய்ப்பு தருவதாக சொன்னார். நான் சொன்னேன் அதற்காக நான் அழவில்லை நீங்கள் கொடுத்த முன் பணத்தை நான் செலவழித்து விட்டேன், உடனே என்னால் திருப்பி தர முடியாது நான் என்ன செய்வேன் என்றேன்.

என் தோளைத் தட்டி கொடுத்து "பரவாயில்ல போங்க" என்று சிரித்தார். அந்த சிரிப்பு மட்டும் இன்னமும் என் எண்ணத்தில் மறையவே இல்லை. அந்த இயக்குனர் சற்று முன் மறைந்த மணிவண்ணன்!

- நடிகர் பார்த்திபன்.

2 comments:

  1. உழைப்பின் வலி உழைப்பாளிக்கு தான் தெரியும் !

    ReplyDelete
  2. மணிவன்னன் ஐயாவை பற்றிய பார்த்தீபனின் நினைவுக்கூறல் அருமை

    ReplyDelete