Tuesday, March 13, 2018

ஏது பணம் என்ற வெறுப்பின் குரல்



சங்கிகளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. 

எளிய விவசாயிகள் செங்கொடியின் கீழ் அணி வகுத்து  நடந்து  வந்ததும்  கட்டுக்கோப்பான அவர்களின் பயணத்தால் அமைதிக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாததும் எஃகு போன்ற அவர்களின் உறுதியை குலைக்க முடியாது என்று புரிந்து கொண்ட அரசு அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதையும் அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அனுதினமும் அவர்களால் வசைபாடப்படும் இஸ்லாமிய மக்கள், காத்திருந்து உணவளித்த நெகிழ்சியான காட்சி காவிகளின் கட்டுக்கதைகளை தகர்த்ததை அவர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

மோடி கூட்டத்தாரின் காலி நாற்காலிகளை கவனமாக தவிர்த்து பொய் முழக்கமிடுவதை மட்டும் பெரிதுபடுத்தி காண்பித்த ஊடகங்களில் செங்கடலாய் காட்சியளித்த விவசாயிகளின் போராட்டமும் இடம் பெற்றதை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அதனால்தான் அவர்கள் தொடங்கி விட்டார்கள்.

வந்தவர்கள் எல்லாம் விவசாயிகள் அல்ல.

விவசாயிகள் கையில் எதற்கு கம்யூனிஸ்ட் கொடி?

கிராமப்புற மக்களை ஆட்டிவைக்கும் நகர்ப்புற மாவோயிஸ்டுகள்

எங்கிருந்தது வந்தது பணம்?

மேலே உள்ள படம் ஒரு சிறு உதாரணம். சிறு துளிகள் இணைந்து மாபெரும் நதியானது என்ற உண்மை சங்கிகளுக்கும் நன்றாகவே தெரியும்.

திரிபுராவிலும் மேகாலாயாவிலும் நாகாலாந்திலும் ஆட்சியைப் பிடிக்க பாஜக செலவழித்த தொகை எப்படி வந்தது என்று அமித்ஷாவால் சொல்ல முடியுமா?

பாஜக திரிபுராவில் கூட்டணி வைத்துள்ள கட்சியின் கொள்கை என்னவென்று மோடிக்கு தெரியாதா!!!

ஆனாலும் ஏன் இந்த கூக்குரல்.

அது வெறும் வெறுப்பின் குரல் . . . . 

வெறுப்பின் குரலை புறக்கணித்து 
வேகமாய் தொடரட்டும் பயணம்!!!!


3 comments:

  1. Really it was amazing..tears rolled down from my eyes..at last the sanghis will be wiped out..

    ReplyDelete
  2. commies are funded by dawood gang.

    ReplyDelete
    Replies
    1. Why don't you prove it and put all of us behind bars?

      Are you an Idiot or Scoundrel?

      Delete