Sunday, March 18, 2018

ஸ்டீபன் ஹாக்கிங்கை கொல்லாதீர் . . .



மறைந்த அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்க் பற்றி இரு கட்டுக்கதைகள் உலாவுகிறது

அவர் தனது இறுதித்தருணத்தில் போப்பாண்டவரைச் சந்தித்ததாகவும் அவரது கைகளைப் பற்றிக் கொண்டு 

"நான் இப்போது கடவுளை நம்புகிறேன்" என்று சொன்னதாகவும் 

அதுதான் அவருடைய கடைசி வார்த்தை 

என்பதாகவும் ஒரு கட்டுக்கதை.

தன் வாழ்நாள் முழுவதும் நாத்திகராகவும் கடவுள் மறுப்பாளராகவும் வாழ்ந்த ஒரு அறிவியலாளரை இப்படி சிறுமைப்படுத்துவது கேவலமான முயற்சி.

வாடிகனில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் அவர் போப்பாண்டவரை சந்தித்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு இந்த கதை பரப்பப் படுகிறது.

இன்னொரு கதை நம் செல்லூர் ராஜூவின் அண்ணனும் இந்திய அறிவியல் துறை அமைச்சருமான ஹர்ஷவர்த்தனால் பரப்பப் படுகிறது.

ஐன்ஸ்டினின் ரிலேட்டிவிட்டி தியரியை விட சிறந்த அறிவியல் கோட்பாடு வேதத்தில் இருப்பதாக ஸ்டீபன் ஹாக்கிங்க் சொன்னதாக அவர் இந்திய அறிவியல் மாநாட்டில் சொல்கிறார்.

அவர் எப்போதய்யா சொன்னார்? அப்படி வேதத்தில் எங்கே இருக்கிறது?

என்று கேட்டால்

நீங்கள்தானே ஊடகக் காரர்கள், நீங்களே கண்டுபிடியுங்கள் 

என்று பதில் சொல்கிறார்.

நல்ல வேளை, விஜயபாஸ்கர் போல நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்லவில்லை.

ஸ்டீபன் ஹாக்கிங்க் ஏற்கனவே இறந்து விட்டார்.

அவர் வாழ்நாள் முழுவதும் கூறிய கொள்கைகளுக்கு முரணான கட்டுக்கதைகளைச் சொல்லி அவரை மீண்டும் கொலை செய்யாதீர்கள், தயவு செய்து.

பொய்கள் மூலம்தான் மதத்தை நிறுவ முடியுமென்றால் அதிலிருந்தே தெரிகிறது, அது எவ்வளவு பலவீனமானது என்று.


1 comment:

  1. bjp kaaranunga maathiri oru mutta pasanga ulagaththula engeyum paarkka mudiyaathu..poi sollaratheye kurikkola vechchirukaanunga ..

    ReplyDelete