Saturday, October 24, 2015

பொன்னார் ஒன்னும் தூங்கலீங்க!!!!!



கொஞ்ச நேரம் முன்பாக முகநூலில் இந்த படத்தைப் பார்த்தேன்.

சே! எவ்வளவு அபாண்டமா பொன்னார் நாடாளுமன்றத்தில் தூங்குவதாக போட்டிருக்கிறார்கள்.

அவர் ஒன்னும் தூங்கலீங்க!

கனவுலகில்  இருக்கிறார். 

"கன்னியாகுமரி தொகுதி மக்கள் ஒவ்வொருவருக்கும் பதினைந்து லட்சம் ரூபாய் எப்படி வழங்குவது?

அங்கே உள்ள மக்களுக்கு "அச்சா தின்" என்று கொண்டு வருவது?

தொகுதியில் உள்ள நாய்களை எப்படி கல்லால் அடிப்பது?"

என்றெல்லாம் யோசித்து யோசித்து  கனவு காணுகிற பொன்னாரை தூங்குகிறார் என்று யாரும் தயவு செய்து கிண்டல் செய்யாதீர்கள்.

மானிய விலையில் வயிறு நிறைய சாப்பாடு, பஞ்சு வைத்து தைத்த நாற்காலி, புரியாத மொழியில் பேசிக் கொண்டிருக்கும் சக கட்சி உறுப்பினர்கள், இப்படிப்பட்ட நிலையில் அவர் வேற என்னங்க செய்ய முடியும்?

முழிச்சுக்கிட்டு இருந்தா மட்டும் என்ன கிழிக்கப் போகிறார் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழவேயில்லை.

 

5 comments:

  1. பாவம் அவருதான் என்ன செய்வார் ? பூரா பயல்களும் இந்தியிலேயே உட்டு ஆத்து ஆதென்று ஆத்தினால் எத்தனை நேரம்தான் தூங்காமல் இருப்பார்

    ReplyDelete
  2. Sir,
    What is your view about this

    http://www.india.com/news/india/rss-workers-take-out-armed-rally-in-jammu-panic-grips-in-old-city-654399/

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பின்னூட்டம் இன்றைய பதிவிற்கான தூண்டுதலாக அமைந்தது. நன்றி

      Delete
    2. Thanks.Good article.

      Delete
  3. கருமமே கண்ணாயிருக்கார்...!?

    ReplyDelete