Wednesday, August 19, 2015

பாமக வின் பரிணாம வளர்ச்சியை பாராட்டுங்கள்


 




"மாற்றம், முன்னேற்றம்" என்று மிரட்டும் விளம்பரங்களை அளித்த போது  எல்லோரும் சின்ன மருத்துவர் ஐயாவை கிண்டல் செய்தார்கள். பாவம் அவர்கள் எல்லாம் விபரம் தெரியாதவர்கள். நான் கூட ஒபாமா விளம்பரத்தை  காப்பியடித்தார்கள் என்று எழுதியிருந்தேன். ஆனால் அதெல்லாம் தவறு என்று இப்போதுதான் உணர்ந்து கொள்கிறேன். 

பாட்டாளி மக்கள் கட்சி என்றால் அதனுடைய அடையாளம் என்ன? பாமக என்றால் உங்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது என்ன?

மரங்களை வெட்டி சாலையின் நடுவே போட்டு போக்குவரத்தை மறிப்பது என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பம்சமாக இருந்தது. பாமக துவங்குவதற்கு முன்பாக வன்னியர் சங்கமாக இருந்த காலத்தில் எண்பதுகளின் இறுதியில் நடந்த ஒரு வார சாலை மறியல் போராட்டத்தின் போதுதான் அந்த உத்தியை முதலில் கையாண்டார்கள். 

அதன் வெற்றி காரணமாக தொடர்ந்து அதனையே பல முறை கையாண்டு "மரம் வெட்டிகள்" என்ற பெயரையும் அடைந்தார்கள். சமீப காலம் வரை மரம் வெட்டுவதை அவர்கள் கைவிடவில்லை என்பதை இந்த இணைப்பின் மூலம் எனது சொந்த அனுபவத்தைப் படித்தாலே   உணர்ந்து கொள்ள முடியும்.

ஆனால் அந்த மரம் வெட்டிகள் என்ற பெயரை மாற்ற பாமக தீவிரமாக முயல்கிறது என்பதை தர்மபுரி கலவரம் மூலம் சொல்லாமல் சொன்னார்கள். இப்போது நிரூபித்து விட்டார்கள்.

"தலித் மக்கள் போய் தேர்த்திருவிழா நடத்துவதா?"  என்ற வேகத்தில் இப்போது சங்கராபுரம் தாலுகாவில் கோயில் தேரையும் ஏழு குடிசைகளையும் எரித்து விட்டார்கள்.

"மரம் வெட்டிகள்" ஆக இருந்தவர்கள் 'சேரி கொளுத்திகள்" என்ற வளர்ச்சியை பெற்றது மாற்றம். 

கடப்பாரை, அரிவாள், ரம்பம் போன்றவற்றை பயன்படுத்தியவர்கள்  இப்போது பெட்ரோல்  குண்டுகளை பயன்படுத்துவது முன்னேற்றம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த பரிணாம வளர்ச்சியை புரிந்து கொண்டு அனைவரும் பாராட்டுங்கள்.

அடுத்து கண்ணி வெடிகள், ஏ.கே 47, ராக்கெட் லாஞ்சர் என்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி நகர முற்றுகை, நகர அழிப்பு என்று இன்னும் முன்னேற்றம் அடைந்தாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை.

எல்லா முன்னேற்றமும் "ஜாதிய ஆதிக்கம்" என்ற சனியனை தக்க வைக்கத்தான் என்பதையும் மறந்து விடக் கூடாது

4 comments:

  1. அந்த கட்சியின் ஜாதிய ஆதிக்க கொடுமை.

    ReplyDelete
  2. we have to use APJ KALAM formula is the only path. same like atomic weapon is protecting us , thalith also should carry the weapon and kill top leaders of pmk like ramdas /anbu mani or guru will lead fear on every body. no other go.

    soon the account will start.......almost they pushed them in to wall now need to bounce only....

    ReplyDelete
  3. வேதனை... படித்த மருத்துவர்களாக தந்தையும் மகனும் இருந்து கொண்டு சாதியை காப்பாற்ற துடிக்கும் இவர்கள் ஏன் படித்தார்கள்.? வீட்டை எரிப்பதற்கு எதற்கு படிப்பு. நாட்டை அழிவுக்கு கொண்டு செல்ல எதற்கு படிப்பு ?

    ReplyDelete