Friday, August 28, 2015

இட ஒதுக்கீடு – குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் குரங்காக....



http://wallpapersshd.com/wp-content/uploads/2013/04/monkey-with-his-children-wallpapers.jpg

மோடியின் சொந்த மாநிலமான குஜராத் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த கொந்தளிப்பான சூழலில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் துணைத்தலைவரான சுரேந்திர ஜெயின் என்பவர் “இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற இதுதான் சரியான காலம். வேண்டுமென்றால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று சொல்லியுள்ளார்.

அதையே பாஜக எம்.பி ஒருவரும் வழி மொழிந்துள்ளார்.

பாஜக அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஒரு கட்சி. ஆனால் அதனை அது நேரடியாக சொல்லாது.

மண்டல் கமிஷன் பரிந்துரையை வி.பி.சிங் ஏற்ற போது அக்கட்சி நேரடியாக எந்த போராட்டமும் நடத்தவில்லை. மாறாக அதன் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் மூலம் வட இந்தியா முழுதும் மிகப் பெரிய வன்முறைக் கலவரங்களை நடத்தியது.

குரங்கு குட்டியை வைத்து ஆழம் பார்ப்பது போல, பாஜக வி.ஹெச்.பி மூலம் ஆழம் பார்க்கிறதா என்று சந்தேகம் வருகிறது.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஒரு சிறிய அமைப்பை தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று அமித் ஷா முன்னிலையில் சொல்ல வைத்த கூத்தையும் நாம் மறந்து விடக் கூடாது.

சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது.

பின் குறிப்பு ; காலையில் பதிவேற்றுவோம் என நேற்று இரவு எழுதியது.
இப்போது பார்த்தால் குஜராத் போராட்டமே இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் என்று அம்பலமாகிவிட்டது. இவர் யாரால் ஏவி விடப்பட்டவர்?
 


 

3 comments:

  1. என்ன நடக்கிறது என்று பார்ப்போம் நண்பரே

    ReplyDelete
  2. Absolutely ..it's a planned agitation against reservation.

    ReplyDelete
  3. வேதனை.. இப்படியே இவர்கள் செய்தால் பலர் வேறு வழியில்லாமல் மதம் மாறுவார்கள்.

    ReplyDelete