Monday, December 3, 2012

மருத்துவர் ஐயாவை மருத்துவமனையில் சேருங்கள்

மருத்துவர் ஐயாவிற்கு ஜாதி வெறி தலைக்கேறி விட்டது.
அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் வன்மத்தோடுதான்
வருகிறது.

தமிழகத்தில் பல் இல்லாமல் இருக்கும் சட்டம் தீண்டாமை
வன் கொடுமை தடுப்புச்சட்டம். காவல்துறை வழக்கு பதிவு
செய்யாது. செய்தாலும் நடவடிக்கையோ, கைதோ 
இருக்காது. இறுதியில் தண்டனை என்பதும் கிடைக்காது.

இதுதான் யதார்த்தம்.

இதைத்தான் ஆதிக்க சக்திகளும் அரசுகள் உருவாக்கி
வைத்துள்ளது. 

அப்படி இருக்கையில் இதையும் நீர்த்துப் போக வைத்தால்
ஆதிக்க சக்திகளுக்கு இன்னும் கொண்டாட்டம்தான்.

அப்போதுதான் இவரது பாட்டாளி சொந்தங்கள்
தீப்பந்தம் ஏந்தி காலனிகளை கொளுத்திக் கொண்டே
இருக்கலாம்.

ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக இவர் 
சொல்வதெல்லாம் அபத்தம்.

கறுப்புக் கண்ணாடியையும் ஜீன்ஸையும் பார்த்து
மயங்கி விடுகின்றனர் என்று சொல்வது
ஒட்டு மொத்த பெண்களுக்கே இழுக்கு.

மருத்துவர் ஐயாவின் வெறி முற்றி 
பார்ப்பவர்களையெல்லாம் கடித்துக் குதறும்
முன் யாராவது அவரது மருத்துவமனையில் 
சேருங்களேன்.

4 comments:

  1. உயிர் காப்பவன் தான் மருத்துவன் உயிர் எடுப்பவன் அல்ல.

    ReplyDelete
  2. தீண்டாமை வன் கொடுமை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுதபடுவது நடக்காத ஒன்றல்ல. வட்டிக்கு கடன் கொடுப்பவர்களே இந்த சட்டத்திற்கு பயந்து வட்டிக்கு தருவதில்லை என்று கேள்விபட்டுள்ளேன்.

    ReplyDelete
  3. மருத்துவரைப் போன்ற அரசியல்வாதிகள் தமிழ்நாட்டின் சாபக்கேடு.

    ReplyDelete
  4. Dr.Ramadoss ethirpathu poliyana kadal & kalappu thirumanangalaithan, unnaimaya kadalai yaralum prikkamuduyathu.oodagangal alavukku athigamagave avarai vimarsanam seikindrana. Mudinthal avarai vimarsipathai vittuvittu, ungal kudumbangalil kalappu thirumanathai seiyungal, piragau ellame nalamai mudiyum.vimarsippathu elithu seithukattungal.

    ReplyDelete