Monday, July 23, 2012

பதினேழு கோடி ரூபாய் எள்......




இதுவும் கர்னாடக அரசு பற்றிய செய்திதான்.

வறட்சியைப் போக்க புது வழி கண்டு பிடித்துள்ளார்கள்.

விவசாயிகளுக்கு ஏதேனும் உதவியா?

இல்லை.

குளம், கால்வாய் தூர் வாறுகின்றார்களா?

இல்லை, இல்லை

கால்நடைகளுக்கு வைக்கோல், தீவனம் அளிக்கப்
போகின்றார்களா?

இல்லை, இல்லை, இல்லை

தொலைநோக்குப் பார்வையில் மரங்களை வளர்க்கப்
போகின்றார்களா?

இல்லை, இல்லை, இல்லவே இல்லை....

பின் என்னத்தான் செய்யப் போகின்றார்கள்?

மழை வழங்காமல் சோதிக்கும் வருண பகவானின்
கோபத்தை தணித்து மழையை வரவழைக்க
கர்னாடக மாநிலத்தில் உள்ள முப்பத்தி நான்காயிரம்
கோயில்களுக்கு தலா ஐயாயிரம் ரூபாய் வீதம்
பதினேழு கோடி ரூபாய் அளித்து வருண ஜபம்
செய்யச் சொல்லப் போகின்றார்கள்.

பாஜக கஜானாவிலிருந்தா கொடுக்கப் போகின்றார்கள்!
மக்கள் பணம்தானே!
இந்த அலட்சியம்தான் பதினேழு கோடி ரூபாய்க்கு
வேட்டு வைத்துள்ளது.

2 comments:

  1. யாகங்களுக்கான‌ சம்பளமாக‌ ராஜ பெண்களிடம் ராஜசுகம் அனுபவித்து விட்டு திரும்ப அரண்மனைக்கு அனுப்பிய‌ பிராமணர்கள்.

    யாகங்களின் பட்டியல். பிராமணர்களுக்கு யாகங்களுக்கான‌ சம்பளம் என்னென்ன?

    இங்கே >>>மேலும் படிக்க இந்து மதம் எங்கே போகிறது? <<<<< சொடுக்கு

    .

    ReplyDelete
  2. 17 கோடி ஒதுக்கியத்ல் என்ன தப்பு; July 20, 2012 - ல் இந்த செய்தியைப் பார்த்தேன்...கீழே..
    "அமெரிக்கா மழைக்காக பூஜைக்கு 170 கோடி ஒதுக்கியுள்ளார்கள்!"

    படிக்க இதன் லின்க்...
    http://www.nambalki.com/2012/07/170.html

    ReplyDelete