Monday, July 2, 2012

ஆட்சியரா ? அமைச்சரா ? அதை செஞ்சது யாருங்க?

வேலூர் நகரத்தில் இரண்டு நாட்கள் முன்பாக 
இரண்டு சுவரொட்டிகள் நகரின் பெரும்பாலான
பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன.

ஒன்று வேலூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை
மாவட்ட கண்காணிப்பாளரை பாராட்டியிருந்தது.

இரண்டாவது சுவரொட்டி அதே விஷயத்திற்காக
சுகாதாரத்துறை  அமைச்சர் திரு விஜயை
பாராட்டி ஒட்டப்பட்டிருந்தது.

விஷயம் ஒன்றுதான்.

வேலூரிலிருந்து காட்பாடி செல்லும் ஒரு சாலை
ஒரு வழியாக மாற்றப்பட்டிருந்தது. அதனால்
மக்களுக்கு ஏராளமான அவஸ்தை.

அது மீண்டும் இப்போது இரு வழிப்பாதையாக
மாற்றப்பட்டு விட்டது.

அதற்காக மாவட்ட ஆட்சியரைப் பாராட்டி
ஒரு சுவரொட்டி, அமைச்சரைப் பாராட்டி
இன்னொரு சுவரொட்டி.

இந்த முடிவு அந்தப் பகுதி மக்களுக்கு மிகவும்
பலனளிக்கும் முடிவு. அதை அறுவடை செய்ய
அந்த பகுதி முன்னாள் கவுன்சிலர் ஆசைப்
பட்டதால் ஆட்சியரைப் பாராட்டி அவர்
சுவரொட்டி அடித்தார்.

அமைச்சருக்கு மட்டும் அறுவடை செய்யும்
ஆசை இல்லாமல் இருக்குமா? எனவே 
தோட்டப்பாளையம் பகுதி மக்கள் சார்பாக
அமைச்சரைப் பாராட்டி இன்னொரு சுவரொட்டி.

இந்த முடிவை உண்மையிலேயே எடுத்தது
யார்? குழம்பிக் கிடக்கும் வேலூர் மக்களுக்கு
அமைச்சரோ, ஆட்சியரோ யாராவது 
பதில் சொல்லுங்களேன்!

No comments:

Post a Comment