Tuesday, May 8, 2012

மற்ற உண்மைகளையும் கூட ஹிலாரி கிளின்டன் சொல்லி இருக்கலாமே?




இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளதற்காக தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், சில அரசியல் காரணங்களால் இதுவரை மேற்கு வங்கத்தில் அமெரிக்கா முதலீடு செய்யவில்லை என்றும் இனி தாராளமாக செய்யும் என்றும் கூறியுள்ளார். சரியாக சொல்ல வேண்டுமானால் இவ்வாறு ஹிலாரி கூறியதாக மம்தா தெரிவித்துள்ளார்.

இத்தோடு மட்டும் ஏன் ஹிலாரி நிறுத்திக் கொண்டார் என்று தெரியவில்லை.

“”மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து நடப்பது அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை.

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வலிமையாக உள்ளதால் அதிகமான இடங்களை நாடாளுமன்றத்தில் பெற்றதும் அக்கட்சி உதவியோடு மத்தியரசு நடப்பதும் எங்களுக்கு பிடிக்கவில்லை.

இந்திய நாட்டை அமெரிக்கா கொள்ளையடிக்கும் சூழ்ச்சிகளுக்கு எல்லாம் மார்க்சிஸ்டுகள் முட்டுக்கட்டை போடுவதும்  எங்களுக்குப் பிடிக்கவில்லை.

ஆகவே அவர்களை பலவீனப்படுத்த உங்களைப் பயன்படுத்திக் கொண்டோம் எங்கள் அறக்கட்டளைகள் மூலமாக உங்கள் நண்பர்கள் பெயரில் இருந்த தன்னார்வ அமைப்புக்களுக்கு  . கோடிக்கணக்கில் டாலர்களை அனுப்பினோம்.

நீங்களும் அந்த விசுவாசத்தோடு நடந்து கொண்டீர்கள். மாவோயிஸ்டு கும்பல்களையும் திறம்பட பயன்படுத்தி மேற்கு வங்க இடது முன்னணி ஆட்சியை அகற்றி விட்டீர்கள்.

எங்கள் ஆசையை அமுல்படுத்திய உங்களுக்கு நன்றி.””

இதையெல்லாம்  ஹிலாரி கிளின்டன் சொல்லியிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் ஒரு நன்றி மறந்தவர். பாவம் மம்தா எவ்வளவு செய்தார்! ஒரு நன்றி கூட சொல்லவில்லையென்றால் எப்படி சரியாக இருக்கும்?

1 comment:

  1. எலி ஏன்டா அம்மணமா அலையுது என்று சிந்திக்கவேண்டிய பதிவு.ஆதாயம் இல்லாமல் ஆத்தை கட்டி இறைகாத சாதி அமெரிக்க சாதி என்பதை உலகம் உள்ளளவும் மறக்கக்கூடாது.

    ReplyDelete