Wednesday, May 30, 2012

விலை உயர்வை திசை திருப்ப இப்படி ஒரு மோசடி நாடகம்

தமிழகத்தின் பல பகுதிகளில்  இப்போது பெட்ரோல்  டீசல்
தட்டுப்பாடு. பல மணி நேரம் பங்குகளில் காத்திருக்க
வேண்டிய அவசியம் உள்ளது.

விலை நூறு ரூபாயானாலும் பரவாயில்லை, பெட்ரோல் 
கிடைத்தால் போதும் என்ற மன நிலைக்கு மக்களைக்
கொண்டு வருகின்ற மலிவான உத்தி இது.

கிட்டத்தட்ட இந்த மனநிலைக்கு மக்களும் வந்து
கொண்டிருக்கிறார்கள். காத்திருக்கும் வேளையில்
கோபம் கொப்பளிக்கிறது. ஆத்திரத்துடன் வார்த்தைகள்
கொட்டுகிறது.

அரசின் மீது,  அதன் வரிகள் மீது, நிர்வாகத்தின் மீது
வர வேண்டிய கோபம் பெட்ரோல்  பங்க் ஊழியர்கள்
மீது வருகின்றது.

விலை உயர்வை திசை திருப்ப பற்றாக்குறை நாடகம்
நடத்தும் அரசின் மீது இந்த கோபத்தை நாம் எப்படி திருப்பப்
போகின்றோம்?
 

No comments:

Post a Comment