Wednesday, May 16, 2012

சென்னை வரக்கூடாது என்று நிபந்தனை போட்ட நீதிபதி நீடூழி வாழ்க என கலைஞர் வாழ்த்து.




ஸ்பெக்ட்ரம்  ராசாவிற்கு ஜாமீன் கிடைத்து விட்டது.கனிமொழி போல இழுத்தடிக்காமல் ஒரே வாய்தாவில் கிடைத்து விட்டது. ராசாவுக்கு பெயில் கிடைத்ததை விட பெயில் நிபந்தனைகள்தான் கலைஞருக்கு மிக்க மகிழ்ச்சி அளித்துள்ளதாம்.

சென்னை வரக்கூடாது என்ற நிபந்தனை கலைஞருக்கு ரொம்ப சந்தோஷமாம். ஏனென்றால்  கனிமொழிக்கு  ஜாமீன் கிடைத்து சென்னை வந்தபோது கொடுக்கப்பட்ட வரவேற்பு போல ராசாவிற்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கனிமொழி, ராஜாத்தியம்மா வகையறாக்களால் முன்வைக்கப் பட்டதாக ஏற்கனவே செய்திகள் வந்துள்ளன.

விடுதலைப் போரில் சிறைப்பட்டு செக்கிழுத்த சிம்மல் வ.உ.சி சிறையிலிருந்து வெளியே வரும் போது அவரை வரவேற்க பத்து பேர் கூட இல்லை என்று படித்ததாக நினைவு.

ஆனால் கனிமொழி வெளியே வந்த போது அளிக்கப்பட்ட ஆரவார வரவேற்பு, மக்கள் முகத்தை சுளிக்க வைத்தது. அது போன்ற வரவேற்பை ராசாவிற்கு அளித்தால் மீண்டும் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டிருக்கும். அப்படி அளிக்காவிட்டால் துணைவி மற்றும் மகளின் அதிருப்தியை சந்திக்க வேண்டியிருக்கும்.

மக்களின் அதிருப்தி பற்றி கவலைப்பட வேண்டாம் என்று வரவேற்பு அளித்தால் சகோதர யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் மகன்கள், மீடியாவை கையில் வைத்திருக்கும் மாறனின் மகன்கள் ஆகியோருடைய வெறுப்பிற்கு ஆளாக வேண்டியிருக்கும்.

இப்போது ராசா சென்னை வரக்கூடாது என்று நிபந்தனை போட்டதால் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் கலைஞருக்கு விடுதலை.

ஆகவேதான் என் வயிற்றில் பாலை வார்த்த நீதிபதியே, நீவிர் வாழ்க என கலைஞர் பாராட்டு மடல் வாசித்துக் கொண்டிருக்கிறாராம்.

1 comment:

  1. இப்படி அரைவேக்காடு தனமாய் எழுதக்கூடாது, சென்னைக்கு செல்ல தடையெல்லாம் விதிக்கவில்லை, செல்லும்போது, நீதிமன்றதிற்கு தகவல் சொல்லவேண்டும் என்று சொல்லியிருகிரார்கள்

    ReplyDelete