Monday, February 13, 2012

பாகிஸ்தானில் பதட்டம் - இந்தியா எச்சரிக்கையாக இருக்குமா?




பாகிஸ்தானில் ஜனநாயகம் எப்போதுமே  அபாயகரமான நிலையில்தான் 
இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் ராணுவ ஆட்சியும் மாறி மாறி
வருவது என்பதே நடைமுறை ஆக உள்ளது. பாகிஸ்தானில் பதட்டம்
குழப்பம் வரும் போது இந்தியா மீது தாக்குதல் நடத்தி பிரச்சினையை
திசை திருப்புவது என்பதும் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கிறது. 


இப்போது கிலானி பதவிக்கும் ஜனாதிபதி சர்தாரி பதவிக்கும் ஆபத்து
வந்துள்ளது. அரசு, ராணுவம், உச்ச நீதிமன்றம் ஆகிய மூன்றும்
இப்போது முறைத்துக் கொண்டிருக்கிறது. யாருடைய கை ஓங்கப் 
போகிறது என்பதை நிகழ்ச்சிப் போக்குகள் முடிவு செய்யும். பாவம்
பாகிஸ்தான் மக்கள்! 


ஆனால் எப்படியானாலும் இந்தியா வோடு  பிரச்சினையை எழுப்பி
திசை திருப்பும் வேலை கண்டிப்பாக நடக்கும். ஆனால் இந்திய அரசு
எச்சரிக்கையாக இருக்குமா? அந்த நம்பிக்கை எனக்குக் கிடையாது.
பாகிஸ்தானோடு பிரச்சினை வருவது இவர்களுக்கும் நல்லதுதானே!
இவர்களின் தவறுகளையும் மக்கள் தற்காலிகமாகமாவது  மறந்து
விடுவார்களே!    

No comments:

Post a Comment