Sunday, April 23, 2023

ஜனாதிபதி போஸ்ட் ஜஸ்டு மிஸ்ஸு

 


மாயாபென் கோட்னானி என்ற "வெறும் நரேந்திரா"வின் முதல்வராக இருந்த போது மாநில மந்தியாக இருந்தவருக்கு குஜராத் கலவரத்திற்காக முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

இப்போது அவர் குற்றமற்றவர் என்றொரு குஜராத் நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது.

வழக்கமாக கொலைகாரர்கள் விடுதலை செய்யப்பட்ட பின்பு அவர்களுக்கு எம்.பி. மந்திரி என்று பதவி கொடுத்து அழகு பார்ப்பது பாஜகவின் பெருமை மிகு பாரம்பரியம்.

ஆனாலும் இவர் சாதாரணமானவர் இல்லையே.

ஒன்ற. இரண்டா, அறுபத்து ஏழு பேர் கொடூரமாக கொல்லப்பட்ட நரோடா பாட்டியா வழக்கு! முதலில் மரண தண்டனை வேறு கொடுத்தார்கள்.

அம்மையார் ரேஞ்சிற்கு ஜனாதிபதி பதவிதான் கொடுக்க வேண்டும். என்ன சில மாதங்கள் முன்பாகத்தான் புதிய ஜனாதிபதி நியமிக்க்கப் பட்டு விட்டார். அதனால் வாய்ப்பு போய் விட்டது.

பேசாமல் அமெரிக்க தூதராக்கி விடுங்கள், 

"வெறும் நரேந்திரா"வுக்கு முன்பு விசா கொடுக்காத அமெரிக்காவை சூப்பராக பழி வாங்கியது மாதிரியும் இருக்கும் ! 

1 comment:

  1. வேலூர் பிச்சைApril 23, 2023 at 9:43 PM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete