Wednesday, December 28, 2022

நல்லது. உறுதியாய் தொடரட்டும்

 



புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழ்ந்த இரண்டு தீண்டாமைக் கொடுமைகள் பற்றி நேற்று எழுதியிருந்தேன்.

அதிலே வேங்கை வயல் கிராமத்து கோயிலுக்கு தலித் மக்களை மாவட்ட ஆட்சியரே அழைத்துச் சென்றுள்ளார். சாமி வந்தது போன்ற போர்வையில் தலித் மக்களை இழிவாக பேசிய பூசாரியும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை சிறப்பு. இன்னொரு பிரச்சினையிலும் குற்றவாளிகளை கைது செய்வார்கள் என்று நம்புவோம்.

இது போன்ற தீண்டாமைக் குற்றங்களில் அரசு எடுக்கிற உறுதியான நடவடிக்கைகள்தான் இனியொரு குற்றம் நிகழாமல் தடுக்கும். 

வழக்கறிஞர் தோழர் பிரதாபன் சொல்வது போல குற்றவாளிகளின் சொத்துக்களை பறித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கலாம்.

ஆனால் அது எந்த அளவு சாத்தியமென்று தெரியவில்லை. ஆண்ட பரம்பரை என்று பீற்றிக் கொண்டாலும் குற்றங்களை நிகழ்த்துபவர்களும் பாதிக்கப் பட்டவர்கள் போல அன்றாடங்காய்ச்சிகளே. வெட்டி ஜாதிப் பெருமைதான் அவர்களின் சொத்து. 

No comments:

Post a Comment