Tuesday, May 3, 2022

இன்று நாங்கள் ஏன்?

 


எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு விற்பனைக்கு எதிராக நாங்கள் இன்று இரண்டு மணி நேர வெளி நடப்பு வேலை நிறுத்தம் நடத்தவுள்ளோம். அது ஏன் என்று விளக்கி எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையின் தமிழாக்கம் மோடி அரசின் வஞ்சகத்தையும் முறைகேடுகளையும் தெளிவாக விளக்கும். 

                  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்,

                                               ஹைதராபாத்

ல்.ஐ.சி பங்கு விற்பனை – முதலீட்டாளர் லாபம் பெற

குறை மதிப்பீடு.

               04 மே அன்று  இரண்டு மணி நேர வேலை நிறுத்தம்

மூலம் எதிர்த்திடுவோம்.

எல்.ஐ.சி பங்கு விற்பனை 4 மே 2022 அன்று தொடங்குகிறது. பங்கு விற்பனை தொடர்பான விபரங்கள் எல்.ஐ.சி இயக்குனர் குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. பங்கு விற்பனையும் பங்கின் விலையும்  இயக்குனர் குழுவாலேயே நிர்ணயிக்கப்படுவது போன்றதொரு தோற்றத்தை உருவாக்க அரசு முயல்கிறது. இந்த மகத்தான நிறுவனத்தோடு இணைந்த யாரும் இதை நம்ப மாட்டார்கள். இந்நடவடிக்கைகள் அனைத்தும் நிதியமைச்சகத்தால் எடுக்கப்பட்டவைதான். இயக்குனர் குழுவால் முடிவெடுக்கப்பட்டது போன்று மேல் பூச்சு தரப்படுகிறது. குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்துவது என்ற தங்களின் பரிந்துரையை இரண்டு வருடங்களாக அமலாக்க முடியாத எல்.ஐ.சி இயக்குனர் குழுவால் நிறுவனத்தின் கட்டமைப்பின் அடிப்படைத் தன்மையை மாற்றும் முடிவையெல்லாம் எடுக்க முடியாது.


 எல்.ஐ.சி பங்கின் விலையை நிர்ணயிப்பதில் மிகப் பெரிய முறைகேடு நிகழ்ந்துள்ளதாக முன்னணி ஊடகவியலாளர் திரு வி.ஸ்ரீதர், நியூஸ்க்ளிக் இதழில் எழுதியுள்ளார். அவர் எழுதியதை மறுக்க இயலாது. எல்.ஐ.சி யின் உள்ளார்ந்த மதிப்பு 5.39 லட்சம் கோடி ரூபாய் என அமெரிக்க நிறுவனம் மிலிமென் நிர்ணயித்துள்ளது. பங்குச்சந்தையில் இணைக்கப்பட்ட இதர தனியார் நிறுவனங்களின் மதிப்பையும் இதே நிறுவனம்தான் நிர்ணயித்தது. அங்கே எல்லாம் பங்கின் விலை உள்ளார்ந்த மதிப்பின் 2.50 லிருந்து 3.5 மடங்கு வரை நிர்ணயிக்கப்பட்டது. உள்ளார்ந்த மதிப்பைப் போல மூன்று மடங்கு அளவில் எல்.ஐ.சி பங்கும் நிர்ணயிக்கப்படும் என்று துவக்கத்தில் சொல்லப்பட்டது. அதாவது எல்.ஐ.சி யின் மதிப்பு 13.5 லட்சம் கோடியிலிருந்து 16.2 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 ஆனால் எல்.ஐ.சி யின் மதிப்பை உள்ளார்ந்த மதிப்பின் 1.1 மடங்காக ரூபாய் 6 லட்சம் என்றே நிர்ணயிக்கப்பட்டது. அதனால் 3.5 % பங்குகளை விற்பதன் மூலம் ரூபாய் 47.250 கோயிலிருந்து ரூபாய் 56,700 கோடி ரூபாய் கிடைப்பதற்குப் பதிலாக 21,000 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும். இது பிரம்மாண்டமான ஊழல் இல்லையென்றால் வேறு எது? இந்த மதிப்பின் மூலம் கேந்திரமான முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று ஒன்றிய அரசு நியாயபடுத்துகிறது. உண்மையான மதிப்பீட்டின்படி விலை நிர்ணயிப்பதற்குப் பதிலாக  முதலீட்டாளர்கள் விருப்பப்படி நிர்ணயிப்பது வினோதமானது. எல்.ஐ.சி சர்வதேச அளவில் 5 ம் இடத்தில் மூன்றாவது வலிமையான நிறுவனமாகவும் பத்தாவது நம்பகத்தன்மையுடைய நிறுவனமாகவும் இருப்பது அரசு அறியாத ஒன்றல்ல. அதனால்தான் சர்வதேச அளவிலான பல ஆய்வாளர்கள், உலக அளவிலேலே எல்.ஐ.சி யின் மதிப்பீடு மிகவும் மலிவாக இருப்பதாக ஆச்சர்யப் பட்டுள்ளனர்.

 எல்.ஐ.சி பங்கு விற்பனை என்பது தனியார்மயத்திற்கான முதல் நடவடிக்கை என்று பார்ப்பதாலேயே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அதனை எதிர்க்கிறது. தனியார்மயத்திற்கு எதிரான அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போராட்டம் மல்கோத்ரா குழு தன் பரிந்துரைகளை அளிப்பதற்கு முன்பே துவங்கியது. தனியார்மயமாக்கவேண்டும் என்ற பரிந்துரைக்குப் பின் அது வேகமானது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டம் நம் உன்னத நிறுவனத்தை தனியார்மயமாக்கும் அனைத்து முயற்சிகளையும் கடந்த 28 ஆண்டுகளாக தடுத்து வந்தது. அரசின் கொள்கையை அமலாக்க விடாமல் 28 ஆண்டுகள் ஒரு தொழிற்சங்கத்தின் போராட்டத்தால் தடுக்க முடியும் என்பது உலக அளவில் ஈடு இணையற்ற ஒரு இயக்கம் என்று சர்வதேச அளவிலும் போராட்டப் படுகிறது. பங்கு விற்பனையின் துவக்கம் என்பது இன்சூரன்ஸ் ஊழியர்களை அச்சுறுத்தி விடாது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும். அரசின் கொள்கைகளுக்கு எதிராக களத்தில் நின்று போராடும்.

 இன்றைய சர்வதேச சூழலில் எல்.ஐ.சி பங்கு விற்பனை என்பதை அரசு தன் வருவாய் பற்றாக்குறையை எப்படியாவது ஈடு கட்டும் தவிப்புடன் முயற்சி என்று சுருக்கி விட முடியாது. அதை விட விரிந்த பின்னணி கொண்டது. அரசு நவீன தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகளை அமலாக்குவதன் மூலம் செல்வாதாரங்களை ஏழை மக்களிடமிருந்து செல்வந்தர்களுக்கு மடை மாற்றுகிறது. தனியார்மயம் அதில் ஒரு பகுதி. எல்.ஐ.சி தேசத்தின் சொத்து. இந்நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செல்வத்தை பணக்கார, லாப வெறி கொண்ட பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மாற்ற முயல்கிறது. எல்.ஐ.சியின் விரிவாக்கத்திற்கோ வளர்ச்சிக்கோ எந்த முதலீடும் செய்யாததால், நிறுவனத்தின் உடைமையாளர்கள் நாங்கள்தான் என்று சொந்தம் கொண்டாட அரசுக்கு எந்த தார்மீக நியாயமும் கிடையாது என்றே நாம் வலியுறுத்தி வருகிறோம்.  எல்.ஐ.சியின் விரிவாக்கமும் வளர்ச்சியும் பாலிசிதாரர்களின் நிதி கொண்டே நிகழ்ந்ததால் உண்மையில் அவர்கள்தான் உடைமையாளர்கள். பாலிசிதாரகளை ஆற்றுப்படுத்தும் முயற்சியாக அவர்களுக்கு 10 % பங்குகள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று அரசு அறிவிக்கிறது. அதன்படி பாலிசிதாரர்களுக்கு 2.21 கோடி பங்குகள் ஒதுக்கப்படும். ஆனால் தனி நபர் பாலிசிதாரர்களின் எண்ணிக்கையோ 20 கோடிக்கு மேல் உள்ளது. பெருவாரியான பாலிசிதாரர்களின் நலனுக்கு எதிரானதுதான்.

 இக்கொள்கைகளுக்கு எதிராக போராடுவது என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் முடிவெடுத்துள்ளது. 28,29,மார்ச், 2022 இரண்டு நாள் வேலை நிறுத்தம் எல்.ஐ.சி பங்கு விற்பனையின் தீமைகள் குறித்து தேசிய அளவில் கவனம் பெற உதவியுள்ளது. எனவே கருத்தொற்றுமையை உருவாக்கவும் அனைத்து சங்கங்களின்  ஒன்று பட்ட போராட்ட நடவடிக்கையை உறுதிப்படுத்தவும் இரண்டு மணி நேர வேலை நிறுத்தம் குறித்து அவர்களிடம் முன்மொழிந்துள்ளோம். இந்த பிரம்மாண்ட ஊழலுக்கு எதிராக மற்ற சங்கங்களும் எதிர்வினைகளை ஆற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

 பங்கு விற்பனை துவங்கும் 04.05.2022 அன்று இரண்டு மணி நேர வெளி நடப்பு வேலை நிறுத்தம் மேற்கொள்ள அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் அனைத்திந்திய எல்.ஐ.சி ஊழியர் சம்மேளனமும் அறைகூவல் விடுத்துள்ளது. அனைத்து எல்.ஐ.சி ஊழியர்களையும் இவ்வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு இதுவரை காணாத மகத்தான வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தங்கள் நிறுவனத்தை சூறையாடும் முயற்சிகளுக்கு எதிராக போராடும் பொறுப்பை எப்படிப்பட்ட இடர்கள் இருப்பினும்,   எல்.ஐ.சி ஊழியர்கள் கைவிட மாட்டார்கள் என்று வரலாறு நினைவில் கொள்ளட்டும்.

வாழ்த்துக்களுடன்

                       தோழமையுள்ள                   

                                                                                                   (ஒப்பம்) ஸ்ரீகாந்த் மிஸ்ரா                                                                                              பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment