Wednesday, May 18, 2022

பேரறிவாளன் - பெரும் நிறைவு

 



பேரறிவாளன் விடுதலையானது உண்மையிலேயே மகிர்ச்சியளிக்கிறது.


அற்புதம் அம்மையாரின் நீண்ட கால சட்டப் போராட்டம் நிறைவுக்கு வந்தது முதல் மகிழ்ச்சி.


மாநிலங்களின் உரிமையை மதிக்காத ஆட்டுத்தாடிக்கு கிடைத்த அடி என்பது இரண்டாவது காரணம்.


பேரறிவாளன் வாக்குமூலத்தில் இல்லாததை நான்தான் இணைத்தேன் என்று எப்போது புலனாய்வு அதிகாரி தியாகராஜன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாரோ, அப்போதே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். காலம் கடந்தாவது நடந்ததே என்பது மகிழ்ச்சிக்கான மூன்றாவது காரணம்.


விசாரணையே இல்லாமல் பல இஸ்லாமியர்கள் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் நியாயம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.


பிகு: அற்புதமான ஓவியத்தை தீட்டிய ஓவியர் தோழர் ரவி பாலேட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment