Thursday, May 5, 2022

பக்தர்கள் இதற்குத்தான் பொங்கனும் . .

 


"கோயில்களில் கடவுள் சிலைகளை பல்லக்கில் வைத்து தூக்குவதில்லையா? அது போலத்தான் ஆதீனத்தையும் பல்லக்கில் சுமப்பது. அவரை சுமக்க நானும் தயாராக இருக்கிறேன்"

இது ஆட்டுக்காரரின் அருளுரை.

கடவுளை வணங்கும் உண்மையான பக்தரை கேட்கிறேன்.

ஆட்டுக்காரர் சொன்னதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? நிலப்பிரபுத்துவத்தின் எச்சமாக, ஊழல் மற்றும் பாலியல் முறைகேடுகளில் சிக்கி கொலை வழக்குகளில் கூட மாட்டியுள்ள ஆதீனங்களும் நீங்கள் வணங்கும் கடவுளும் ஒன்றா?

மதுரை ஆதீனத்துக்கும் நித்திக்குமானது வடிவேலு பேக்கரி டீலிங் போல அசிங்கமான ஒன்றுதான். அந்த டீலிங்கில் சிக்கல் வரவில்லையென்றால் நித்திதான் இன்று மதுரை ஆதீனம். ஆட்டுக்காரர் கூற்றுப்படியும் நித்தியும் கடவுள் (அந்தாள் இப்பவும் தன்னை கடவுள் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறான். அதை ஒரு மூடக் கூட்டமும் நம்பிக் கொண்டு இருக்கிறது என்பது வேறு கொடுமை)

ஒரு பிற்போக்குத்தனமான செய்கையை நியாயப்படுத்த ஆதீனங்களை கடவுளாக சொல்வதை பக்தர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? அப்படியென்றால் நீங்கள் பொங்க வேண்டியது அண்ணாமலைக்கு எதிராகத்தான். 

அண்ணாமலை சொல்லியதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் நீங்கள் பக்தர் அல்ல, மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் சங்கி. உங்களுக்கு தி.க, தி.மு.க பற்றி பேசும் அருகதை கிடையாது. 


No comments:

Post a Comment