Wednesday, May 25, 2022

பொய் சொன்னால்தான் மோடி மந்திரி

 மோடியின் அமைச்சரவையில் இடம் பெற பொய்யனாய் இருக்க வேண்டியதுதான் முதல் தகுதி போல.

 


*நாளொரு கேள்வி: 24.05.2022*

 

தொடர் எண்: *723*

 

இன்று நம்மோடு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் *சு.வெங்கடேசன்

#######################

 

*முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா?*

 

கேள்வி: ரயில்வே துறையில் தனியார் மயம் இருக்காது என அத்துறை அமைச்சர் கூறி இருக்கிறாரே?

 

*சு. வெங்கடேசன்*

 

சென்னை வருகை தந்த

அமைச்சர்  ரயில்வேயில் தனியார்மயம் கிடையாது என்று அறிவித்திருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுஆகும்

 

*தேசிய ரயில் திட்டம்* என்ற ஒன்றை இந்திய ரயில்வே  அறிவித்திருக்கிறது. வெளியிட்டிருக்கிறது. இதனை நிதியமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார். அந்தத் திட்டத்தில் கூறப்பட்டு இருப்பது என்ன?

 

* 2031 க்குள் அனைத்து சரக்கு ரயில்களும் தனியார்மயம் ஆகிவிடும்

 

* இந்திய ரயில்வே வேகன் வாங்கவேண்டிய அவசியம் இருக்காது

 

* அதேபோல லாபம் வரக்கூடிய குளிர்சாதன இருக்கை மற்றும் 3 அடுக்குபடுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை மட்டும் கொண்ட விரைவு வண்டிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்

 

இப்படி அந்த  திட்டத்தில் கூறப்பட்டுள்ளதா இல்லையா?  

 

*லாபம் வரும் வண்டிகள் அனைத்தும் தனியாருக்கு. இழப்பு ஏற்படும் வண்டிகள் மட்டும் அரசுக்கு* என்ற கொள்கையை அறிவித்துவிட்டு ரயில்வேயில் தனியார்மயம் இல்லை என்று கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது இல்லாமல் வேற என்ன

 

அனைத்து வண்டிகளும் தனியார்மயமானால்

*பயணக் கட்டணம் உயரும். பயணிகள் பாதிக்கப்படுவார்கள். அத்துடன் ரயில்வேயின் நிரந்தர வேலை வாய்ப்புகள் பறிமுதலாகும் .சமூக நீதி பாதிக்கப்படும்.* 

பொதுமக்கள் கட்டுப்படியான ரயில் பயண வசதி இன்றி பாதிக்கப்படுவார்கள்

 

*செவ்வானம்*

 

No comments:

Post a Comment