Friday, January 21, 2022

வாய் தவறியா? மனதின் குரலா மோடி?

 


வங்கி ஊழியர் சங்கப் பொறுப்பாளரும் எழுத்தாளருமான தோழர் ஜா.மாதவராஜ், முக நூலில் ஒரு பதிவிட்டிருந்தார். 

அந்த பதிவு.

மோடி திரும்பவும் இன்று உளறிக் கொட்டி இருக்கிறார்.
பெண் குழந்தைகளுக்கு கல்வியளிக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி தொலைக்காட்சி நேரலையில் பேசியிருக்கிறார். அப்போது ’Beti Bachao Beti Padhao’ (Let daughters live, let daughters study) சொல்வதற்கு பதிலாக ’Beti bachao, beti patao ’ (Let daughters live, let us seduce our daughter) என்று சொல்லியிருக்கிறார். ட்வீட்டர் முழுவதும் கிண்டல்களும், கேலியுமாய் இருக்கின்றன.
திரும்பவும் டெலி-பிராம்டர் வேலை செய்யவில்லையா? அல்லது மூளை வேலை செய்யவில்லையா என்று தெரியவில்லை.
வாய் தவறி பேசி இருக்கிறார். சமீப காலமாகவே அவர் கண்ட்ரோல் இல்லாமல் இருக்கிறார் என்பதை உலகத்துக்கு திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

அவருக்கு நான் எழுதிய பின்னூட்டம் கீழே

ஒரு பொறியாளர் பெண்ணை வேவு பார்த்தவராயிற்றே! வாய் தவறி வந்திருக்குமா? அல்லது அதுதான் அவர் மனதின் குரலோ?

ஒன்று மட்டும் நிச்சயம். 

மோடியின் மாண்பு அன்றாடம் அல்லல்படுவதைக் கண்டு ஆட்டுக்காரருக்கு ரத்தக் கொதிப்பு வரப் போவது நிச்சயம்.

No comments:

Post a Comment