Thursday, January 13, 2022

பயம் பிடிச்சிருக்கு மாலன்

 


மூமூமூத்த்த்த்த்த்த பத்திரிக்கையாளர் மாலன் தன் முக நூல் கண்க்கை பூட்டி வைத்துள்ளார். ஆனால் அவர் அடுத்தவர் பக்கங்களுக்குச் சென்று செஞ்சோற்றுக் கடன் தீர்க்க ஏதாவது அபத்தமாக எழுதுவார். எதிர்வினை வரும் போது அதை தாங்க முடியாமல் அந்த அபத்தமான பின்னூட்டத்தை நீக்கி விடுவார்.

அவரது ட்விட்டர் பக்கம் கடந்த டிசம்பரிலிருந்து செயல்படவில்லை. கருத்துக் கணிப்பு என்று அவர் கேட்ட கேள்விகளுக்கு அவர் எதிர்பார்க்காத பதில்கள் மட்டுமே வந்ததால் முடங்கிப் போயிருந்தார், பாவம்.

இப்போது என்ன நிலவரம் என்று பார்த்தால் அவர்  அதையும் பூட்டி வைத்து விட்டார். அவர் போடும் ட்வீட்டிற்கு அவர் யாரை பின் தொடர்கிறாரோ அல்லது யாருடைய ட்வீட்டை அவர் மறு ட்வீட் செய்கிறாரோ, அவர்கள் மட்டுமே பின்னூட்டம் இட முடியும்.

அவர் வெளியிடும் அரிய கருத்துக்களுக்கு நாகரீகமான எதிர்வினைகள் மட்டுமே வரும். சங்கிகளின் மொழியில் எல்லாம் யாரும் எழுதுவதில்லை. ஆனாலும் மாலன் அவற்றையெல்லாம் சந்திக்கும் தைரியம் இல்லாமல் ட்விட்டரையும் பூட்டி விட்டார்.

 கருத்துக்களை சந்திக்கும் திராணியில்லாத உங்கள் பயம் எனக்கு பிடிச்சிருக்கு மாலன்.

 “மாலன் பக்கம்” என்றொரு காலாவதியான முக நூல் பக்கம் மட்டும்தான் இப்போது உள்ளது. அதை பூட்டி வைப்பாரா இல்லை அவருக்கு எதிர்வினை ஆற்றுபவர்களின் கண்களில் அவர் எழுதுவது தெரியக் கூடாது என்று அவர்களை ப்ளாக் செய்வாரா என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

 


பிகு : மூத்தவரை கிட்டத்தட்ட 17,000 பேர் பின் தொடர்ந்தாலும் அந்த கடைசி அபத்த ட்வீட்டிற்கு லைக் கொடுத்தவர்கள் வெறும் 19 பேர். மறுட்வீட் செய்தவர்கள் அதை விட மோசம். ஜ்ஸ்ட் ரெண்டே ரெண்டு பேர். அவ்வளவுதான் அவர் பவிசு.

No comments:

Post a Comment