Sunday, January 30, 2022

அஹிம்சை வேண்டாம். ஆயுதமேந்து காந்தி

 


ஹேராம் சொன்ன 
உன்னைக் கொன்றது ஒரு கோட்ஸே.
இன்று ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு ஊரிலும்
வெறி கொண்டு அலைகின்றனர்
ஓராயிரம் கோட்ஸேக்கள்,
ஜெய்ஸ்ரீராம் முழக்கத்தோடு.

அமைதியைக் கொல்கிறார்கள்.
நம்பிக்கையைக் கொல்கிறார்கள்.
சுதந்திரத்தைக் கொல்கிறார்கள்.
வாழ்வாதாரத்தைக் கொல்கிறார்கள்.
உரிமையைக் கொல்கிறார்கள்.
உணர்வுகளைக் கொல்கிறார்கள்.
ஒற்றுமையைக் கொல்கிறார்கள்.
இந்தியா எனும் சிந்தனையையே 
நித்தம் நித்தம் கொல்கிறார்கள்

மதத்தின் பெயரால் குற்றம் செய்து
மதத்தின் பெயரால் தப்பிக்கும்
மதவெறியர்களை தண்டிக்க
அஹிம்சை இனி வேன்டாம் 
அண்ணலே ஆயுதமேந்து. 
குறைந்த பட்சம் தடியையாவது . . .





No comments:

Post a Comment