Monday, January 3, 2022

உங்கள் கையில்தான் உள்ளது கவர்னர் . . .



 "ஜனாதிபதியும் ஆளுனரும் அரசியல் சாசன நிறுவனங்கள். அவர்களை விவாதப் பொருளாக்கக் கூடாது"

என்று வெடித்துள்ளவர் கேரள மாநில ஆளுனர் ஆரிப் மொஹமது கான். 

ஏராளமான கட்சிகளில் இருந்து விட்டு பாஜகவில் செட்டிலாகி கவர்னரான பெருமைக்குரியவர்.

இப்போது ஏன் அவர் சீறுகிறார்.

கேரள மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை அழைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கௌரவ டாக்டர் பட்டம் தரச் சொல்லி வற்புறுத்துகிறார். பல்கலைக்கழகங்களின் சுயேட்சையான செயல்பாட்டில் தலையிடாதீர்கள் என்று கேரள மாநில அரசு சொல்கிறது.

காங்கிரஸூம் பாஜகவும் கை கோர்த்துக் கொண்டுள்ள கேரளாவின் அதிசயமாக மாநில காங்கிரஸ் தலைவர் சதீஷன் கவர்னரைக் கண்டிக்க அவருக்கு கோபம் வந்து விட்டது.

அரசியல் சாசன நிறுவனங்களான ஜனாதிபதியையும் ஆளுனரையும் விவாதப் பொருட்களாக மாற்றக் கூடாது என்றால் அந்த பதவிகளுக்கேற்ற பொறுப்புணர்வோடு, ஒன்றிய அரசின் ஜால்ராவாக அல்லாமல். மலிவான அரசியல் செய்யாமல் இருந்தால்தான் சாத்தியம் என்பதை அவருக்கு யாராவது சொல்லுங்களேன் . . .

No comments:

Post a Comment