Monday, January 3, 2022

ஆடு சாப்பிடலாமா அண்ணாமலை?

 


மீன் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் அல்ல என்றொரு அரிய கருத்தை உதிர்த்துள்ளார் ஆட்டுக்கார அண்ணாமலை.



மீன் சாப்பிடுபவர்களே இந்துக்கள் இல்லை எனும் போது மீன் பிடிப்பை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மீனவர்கள் யாரும் இந்துக்களாக இருக்க முடியாதல்லவா அண்ணாமலை?

 ஏற்கனவே மாட்டுக்கறி கூடாதென்று சொல்லி விட்டார்கள். இப்போது மீன். அடுத்து கோழி சாப்பிடுவது கூடாது என்பீரா அண்ணாமலை?

 ஆட்டுப் பண்ணை நடத்தும் அண்ணாமலையே! ஆட்டைச் சாப்பிடலமா என்பதையும் தெளிவாகக் கூறி விடவும்

 அப்படி ஆட்டையும் சாப்பிடக் கூடாது என்றால் என்ன எழவிற்காக நீங்கள் ஆடுகளை வளர்க்கிறீர்கள்?

 “தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” என்று உங்களுக்கு முன்பாக தொண்டை வறண்டு போகுமளவு கத்திக் கொண்டிருந்த இந்நாள் கவர்னர் மீன் சந்தையெல்லாம் நடத்தினாரே! அவரை இந்து மதத்திலிருந்து வெளியேற்றி விட்டீர்கள் அல்லவா? அதே போல இல.கணேசனையும் வானதியையும்.

 கடைசியாகத்தான் ஒன்று  தோன்றியது.

 மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் சங்கீத் சோம் என்ற பாஜக எம்.எல்.ஏ, மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று முகமது அக்லக்கை அடித்துக் கொன்றது போல, தன் ஆட்டுக்குட்டி வியாபாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆட்டுக்காரரும் மீனுக்கு எதிராக குரல் கொடுத்து விட்டார் போல.

1 comment:

  1. Annamalai's Goat is not for satisfying his hunger. It is for satisfying something else.

    ReplyDelete