Monday, January 31, 2022

கோட்ஸே பல் இளிக்கிறான்.

 




இந்த ஏழாண்டுகளில் நிலைமை மாறியுள்ளது. முன்பெல்லாம் காந்தி ஜெயந்தியோ, காந்தி நினைவு நாளோ வந்தால் சங்கிகள் அடக்கி வாசிப்பார்கள். கோட்ஸேவுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று ஆர்.எஸ்.எஸ் சொன்னது போல அவர்களும் ஒதுங்கி நிற்பார்கள்.

 ஆனால் மோடி எனும் கேடி பிரதமரான பின்பு நிலைமை மாறிக் கொண்டே இருக்கிறது.

 காந்தியை எந்த அளவு திட்ட முடியுமோ, அந்த அளவு திட்டுகிறார்கள். காந்தி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் கிடையாது. அவருடைய கொள்கைகள், செயல்களோடு கண்டிப்பாக முரண்பாடு உண்டு. ஆனால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவரது மகத்தான பங்கையோ, விடுதலைப் போரில் சாமானிய மனிதர்களை ஈர்த்தவர் அவர்தான் என்பதையோ யாராலும் மறுக்க முடியாது.

 விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கருங்காலிகள் என்பதால் விடுதலைப் போராட்டத்தையும் அதிலே மகாத்மாவின் பங்களிப்பையும் கொச்சைப் படுத்திய பல பதிவுகளைப் பார்த்தேன். (மத்யமர் அரசியல் என்று தனியாக ஒரு குழுவே உருவாக்கப்பட்டு விட்டது. என் ரத்த அழுத்தம் அதிகரிக்கக் கூடாது என்று அதில் இணையவில்லை. அதில் என்னென்ன அபத்தங்களோ தெரியவில்லை)

 அது மட்டுமல்ல, கோட்சே காந்தியைக் கொன்றது நியாயமே என்ற பதிவுகளும் பல. தோழர் ஜெயச்சந்திர ஹாஷ்மி அவரது நட்புப் பட்டியலில் உள்ள ஒருவருடய பதிவை மனம் நொந்து பகிர்ந்து கொண்டார். அது இங்கே.



 காந்தியைக் கொன்றது கோட்ஸே என்று சொல்லக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் கூட்டத்தில் புகுந்து தடுக்குமளவு காவல்துறையில் சில கறுப்பாடுகள் காவிமயமாகி உள்ளன. வழக்கு வேறு பதிந்துள்ளார்கள்.

 இதையெல்லாம் பார்த்தால் கோட்ஸே கண்டிப்பாக பல் இளிப்பான்.

 அதிகாரத்தின் உச்சத்திற்கு ஒரு மோசமானவன் வந்தால் அவனால் அந்த ஒட்டு மொத்த அமைப்பையுமே நாசமாக்கி விட முடியும்.

 இன்றைக்கு இந்தியாவில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மோடி எனும் மோசமான மனிதன் ஆட்சிக்கு வந்து விட்டதால் சங்கிகள் எல்லோருமே தங்கள் கோரப் பற்களோடு ரத்தம்  ருசிக்க துடிக்கிறார்கள். பொய் சொல்லவோ விஷத்தைப் பரப்பவோ கொஞ்சமும் கூசாத ஜந்துக்கள் இவர்கள்.

 சுயேட்சையாக செயல்பட வேண்டிய அனைத்து அரசியல் சாசன அமைப்புக்களுமே, நீதிமன்றங்கள் உட்பட அரசின் கடைக்கண் பார்வைக்கு ஏற்ப செயல்படுகின்றன.

 மோடி ஆட்சியை தூக்கி எறிவதைத் தவிர வேறு எப்படியும் இந்த நிலைமையை மாற்ற இயலாது.

No comments:

Post a Comment