Thursday, June 29, 2017

மகாத்மாதான் . . . மோடி இல்லைப்பா......

 
 
மாடுகளின் பெயரில் மனிதர்கள் கொல்லப்படுவதை மகாத்மா காந்தி ஏற்க மாட்டார் என்று மோடி சொன்னது பற்றி பல கருத்துக்கள் உலா வருகிறது.
 
அது அவர் நடிக்கும் நாடகம் என்றும் பலர் சொல்கிறார்கள்.
 
அரசியல் கட்டாயம் என்றும் சிலர் சொல்கிறார்.
 
இனி மாட்டின் பெயரால் கொலை நடக்காது என்று இப்போதும் கூட சிலர் அப்பாவிகளாக நம்புகிறார்கள் 
 
அல்லது
 
அப்படி நடிக்கிறார்கள்.
 
மோடி சொன்னதை கொஞ்சம் ஆராய்ந்தால்
 
"மகாத்மா காந்தி ஏற்றுக் கொள்ள மாட்டார்"
 
என்றுதான் 
 
அவர் சொல்லியுள்ளார். நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றா சொல்லியிருக்கிறார்?
 
அவரு கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டீங்களா?
 
 

1 comment: