Friday, June 23, 2017

ஏழையென எழுதி . . .. அச்சா தின் அசிங்கம் . . .





மருத்துவரீதியில் எனக்கு ரத்தக் கொதிப்பு எல்லாம் கிடையாது. ஆனால் தங்களின் அலங்கோல ஆட்சி மூலமாக காவிகள் உருவாக்கி விடுவார்கள் போல.

இன்று காலை ஹிந்து நாளிதழில் படித்த செய்தி அப்படிப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் டௌசா என்ற மாவட்டத்தில் யாரெல்லாம் ரேஷன் கடையில் இலவச கோதுமை வாங்குகிறார்களோ, அவர்கள் வீட்டுச் சுவரில்

“நான் ஏழை. ரேஷன் கடையில் இலவசமாக கோதுமை வாங்குகிறேன்”

என்று மாவட்ட நிர்வாகம் பெயிண்டால் எழுதி வைத்துள்ளது. குடும்பத் தலைவரின் பெயரையும் வேறு எழுதி வைத்துள்ளது.

தன்னுடைய மக்களை எப்படி கேவலப்படுத்துவது என்பதில் மோடியும் அவரது மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றனர்.

இன்று சுவரில் எழுதிய கயவர்கள் நாளை முகத்தில் பச்சை குத்துவார்களா?

இதுதானய்யா மோடி சொன்ன “அச்சா தின்”

இனியும் பாஜக விற்கு ஓட்டு போடுபவர்கள் மன நலன் குன்றியவர்களாக மட்டுமே இருக்க முடியும்….

3 comments:

  1. Only rajas can live in raja's-dhan. So poors can sent to UP as pardeshi and pakkeri.

    ReplyDelete
  2. இது எல்லாம் மோடியின் மேல் காழ்புணர்சியால் புனையப்பட்டது என்றும். அல்லது அவர்களின் சொந்த கருத்து என்று விளக்கம் வருமே பரவாயில்லையா.....

    ReplyDelete