Monday, June 12, 2017

அச்சுறுத்தும் எச்.ராசா கடிதம்





ஐ.ஐ.டி இயக்குனருக்கு எச்.ராசா அனுப்பிய கடிதத்தின் நகல் என ஒன்றை முக நூலில் பார்த்தேன். அதிலே மத்திய மனித வளத்துறை அமைச்சருக்கு நகல் அனுப்பப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

இப்படித்தான் பண்டாரு தத்தாத்ரேயா என்ற அமைச்சர் ஏ.பி.வி.பி எனும் தீவிரவாத அமைப்பை முன்னேற்ற ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள அம்பேத்கார் மாணவர் சங்கத் தோழர்கள் மீது புகார் சொல்லி அன்றைய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிர்தி இராணி அம்மையாருக்கு அனுப்பிய கடிதம்தான் இறுதியில் ரோஹித் வெமுலாவின் உயிரைக் குடித்தது.

இப்போது எச்.ராசா அனுப்பியுள்ள கடிதமும் அதே ஏ.பி.வி.பி தறுதலைகளின் கட்டுக்கதையின் அடிப்படையில்தான். இன்னொரு ரோஹித் வெமுலாவின் உயிரை காவிகள் பறித்திட நாம் அனுமதிக்கக் கூடாது.

2 comments:

  1. இப்படி பதிவெழுதி அந்த நாயை பெரிய மனிதனாக்க வேண்டாம்

    ReplyDelete
  2. அந்த மனிதனை நாய் என்று சொல்லி நாய்களை இழிவுபடுத்த வேண்டாமே

    ReplyDelete