Friday, May 12, 2017

முக நூலை முடக்கினால் மட்டும் ??????????




தமுஎகச வின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் கருப்பு கருணாவின் முக நூல் பக்கத்தை கடந்த நவம்பர் மாதம்தான் முடக்கினார்கள். 

இப்போது மீண்டும் முடக்கியுள்ளார்கள்.

சங்கிகளை அம்பலப்படுத்தி பதிவுகள் எழுதும் போது, அதற்கு பதில் அளிக்க வக்கற்றவர்கள் இப்படி புகார் கொடுத்து முக நூல் பக்கத்தை முடக்க வைக்கிறார்கள். 

சங் பரிவாரக்கும்பல் வெறும் முட்டாள்களையும் முரடர்களையுமே கொண்டுள்ளது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. ஒரு மூன்று நாள் முக நூல் பக்கத்தை முடக்கி வைத்தால் உங்களுக்கு எதிரான கருத்துப் பிரச்சாரத்தை, நீங்கள் இந்தியாவை அழிக்க வந்த கொடியவர்கள் என்பதை சொல்லாமல் பயந்து விடுவோமா என்ன? 

இல்லை முக நூலே இல்லாவிட்டால் நாங்கள் மௌனமாகி விடுவோமா? 

நீங்கள் அடக்க, முடக்க முயன்றால் இன்னும் ஆவேசமாக வருவோம். 

உங்களிடம் இருப்பது பொய்
எங்களிடம் இருப்பது உண்மை.

இறுதி வெற்றி எப்போதும் எங்களுக்கே, உழைப்பாளி மக்களுக்கே.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete