Friday, December 30, 2016

மோடியை தப்பா பேசாதீங்கஜி- நெசமாதான் ஜீ





இன்று வாட்ஸப்பில் ராமலிங்கம் என்ற தோழர் அனுப்பியது. மரண கலாய். ஒரே ஒரு பயம்தான் இருக்கிறது. இதில் மோடி கலாய்க்கப்பட்டுள்ளார் என்பதை புரிந்து கொள்ளாமல் இது நிஜம்தான் என முட்டாள் காவிகள் பிரச்சாரம் செய்து விடுவார்களே என்பதுதான். 

 சுதந்திரத்திற்கு பின்பு காங்கிரஸ் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்துள்ளது . இருப்பினும் அவர்களில் எந்த பிரதமருக்கும் மோடியை போன்ற தீர்க்கமான தொலைநோக்குப் பார்வை இல்லை என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் .


அதே போல தமிழ்நாட்டை கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த திராவிட கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் திரு மோடியை போல செயலாக்கம் பெற்றவர்களாக இல்லை என்பதையும் , நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டிய தருணம் இது .
 
ஆட்சி அதிகாரங்களில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக போராடுகிறோம் என கூறிக்கொள்ளும் இடது சாரிகளும் இன்னும் பிற கட்சிகளும் உண்மையில் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தால் மோடியின் தீர்கமான திட்டங்களை போன்று ஒரு திட்டத்தை முன்பே பரிந்துரையாவது செய்திருக்க முடியும் .
 
அமெரிக்காவின் வளர்ச்சியை சுட்டிக்காட்டி வாய்கிழிய பேசும் அரசியில்வாதிகள் யாரும் அதற்கான உண்மையான காரணத்தை இதுவரை கண்டறியவில்லை .
 
ஆனால் மோடி பதவியேற்றவுடன் அமெரிக்காவை ஆராய்வதற்கு தனிக்குழு அமைக்கப்பட்டது . அக்குழுவில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் , சமஸ்கிருத ஒலைச்சுவடிகளை ஆராயும் ஜோதிட வல்லுனர்களும் இருந்தனர் . இக் குழு தீவிரமாக அமெரிக்காவை ஆராய்ந்து ஒரு பேருண்மையை கண்டுபிடித்து மோடியிடம் வழங்கியது .
 
அது என்னவெனில் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு மூல காரணம் - அங்குள்ள சுதந்திர தேவி சிலையின் வாஸ்து பலன்களே என்பதாகும் .
 
இதை கண்டுபிடித்தவுடன் பிரதமர் மோடியின் அலுவலுகம் பரபரபரபாக செயலில் இறங்கியது . மோடியின் அரசு வெற்று பேச்சுகளை தவிர்த்து செயல்படுவதில் மட்டுமே குறியாய் இருந்தது .
 
அதன் விளைவாக பூமத்திய ரேகையின் சுக்கிர மையமாக 270 டிகிரி கோணத்தில் அச்ச ரேகை இடதுபுறமாக 45டிகிரி வளைவும் தீர்க்க ரேகை வலதுபுறத்தில் 45 டிகிரி வளைவும் இருக்கும்படி ஒரு உயர் வாஸ்து மையமாக குஜராத்தில் நர்மதா ஆற்றின் கரையில் சர்தார் வல்லபாய் படேலின் சிலையாக 3000 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது .
 
அதை தொடந்து 3600 கோடி செலவில் மாரட்டிய மாமன்னன் வீரசிவாஜி சிலையை அமைக்கும் திட்டம் இறுதிவடிவம் பெற்று இப்பொழுது மோடியின் திருக்கரங்களால் மும்பையின் ரம்மியமான அரபிக்கடல் பகுதியில் துல்லியமான அட்ச தீர்க்க நேனோ ரேகையில் 45 டிகிரி சுக்கிர கோண சந்திப்பில் அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது .
 
ஒரு நாட்டை நிர்வகிக்கும் பிரதமர் ,இரண்டு சிலைக்காக 7000 கோடி ரூபாய் செலவு செய்ய அடிக்கல் நாட்டுவது அறிவுப் பூர்வமானதா ? என கேட்பவர்களுக்கு இச்சிலைகளின் மூலம் விளையப்போகும் பயன்கள் தெரிவதில்லை .
 
7000 கோடி முதலீட்டில் உருவாகும் இவ்விரு சிலைகளும் சரியாக அட்ச தீர்க நானோ ரேகையில் 45டிகிரி சுக்கிர கோண சந்திப்பில் நிர்மாணிக்கப்படுவதால் இந்தியாவின் பருவக்காற்று பரவலாக்கப்பட்டு நாடு முழுவதும் சீரான மழையை பெறும் . நாட்டின் ஒருபகுதி வெள்ளத்தாலும் , மறுபகுதி வறட்சியாலும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை மாறும் .ஆதலால் பல லட்சம் கோடிகளை விழுங்கும் நதி நீர் இணைப்பு போன்ற திட்டங்கள் இனிமேல் தேவைப்படாது.
 
பாரத பிரதமரின் முந்தைய சீர்மிகு திட்டமான Make in India திட்டத்தின் மூலம் இந்த 7000 கோடி ரூபாய் சிலை செய்வதற்கான ஆர்டர் சீன நிறுவனத்திற்கு வழங்கப்படும் . அதனால் நம் பொருளாதாரம் உயரும் .
 
எப்படியெனில் இந்த சிவாஜி சிலை செய்வதற்கான ஆர்டரை நமது பிரதமர் மோடி அவர்கள் மிகுந்த ராஜதந்திரத்துடன் சீனாவுக்கு மொய் செய்துள்ளார் .
 
எனவே இனிமேல் சீனாவிற்கு தேவையான மாசேதுங் சிலை , டிராகன் சிலை , பாம்பு சிலை ,போதி தர்மர் சிலை ஆகியவற்றை செய்வதற்கான அர்டர்களை சீனா இந்தியாவிற்குத்தானே மொய் செய்தாக வேண்டும் . அதுதானே முறை.
 
அந்த மொய் ஆர்டர்களின் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் வானாளவிய உயரத்தை தொடும் .
 
இன்னும் இச்சிலை மூலமாக கிடைக்கப்போகும் இயற்பியல் , வேதியல், அல்ஜீப்ரா பயன்களின் பட்டியல் மிகப்பெரியது 
.
இதையே பின்பற்றி வங்களா விரிகுடாவில் 4000 கோடி செலவில் சிலை அமைக்க நாம் தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் . அரசு செவிசாய்க்க வில்லையெனில் போராட தயாராக வேண்டும் .
 
ஆம் . இங்கு போராடாமல் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை .
 
ஜெய்ஹிந்த்.

2 comments:

  1. ஏதோ ஒரு திருப்தி!

    ReplyDelete
  2. 100 கோடி ரூபா மக்கள் பணத்தை செலவு செய்து தமிழ் தாய் சிலை வைக்க 50 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த திராவிட கட்சிகளை சேர்ந்த ஜெயலலிதாவும் அறிவித்திருந்தார்.
    இந்தியாவில் சிலை வைப்பது என்றால் மக்கள் ஏதோ அதன் மூலம் தாங்கள் வாழ்கை வசதிகள் உயர்வு பெற்றது போல் மகிழ்கிறார்கள்.ஆகவே அரசியல்வாதிகள் இம்மாதிரியான லுசுதனமான நடவடிக்கைகளை மக்களை ஏமாற்ற தொடர்ந்து செய்வார்கள்.

    ReplyDelete