Friday, December 30, 2016

ஜெ விற்கு பாரத ரத்னா கொடுத்தால் வியப்பில்லை






ஏராளமான ஊழல் புகார்கள் காரணமாக ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா கொடுக்க வாய்ப்பில்லை என்று நிறைய பேர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ இதுவரை கொடுக்கப்பட்ட விருதுகள் எல்லாம் தகுதியானவர்களுக்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது என்று நம்பிக்கொண்டிருக்கிற அப்பாவிகள் அவர்கள்.

ராம்மோகன்ராவ் ரெய்டு அடங்கிப் போய் விட்டது. சசிகலாவிற்கு எதிராக பாஜக உள்ளது என்ற கருத்தோட்டம் பொன்னார் மற்றும் தமிழ் இசை யின் வாழ்த்துக்களால் அடிபட்டு விட்டது.

மாநிலங்களவையில் பாஜகவிற்கு அதிமுக ஆதரவு அவசியம். அதற்காக எந்த ஒரு சமரசத்தையும் செய்து கொள்ள மோடி தயங்க மாட்டார். ஆகவே ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா கொடுத்தால் அதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

இப்போதைக்கு சசிகலாவிற்கு தரவில்லை என்றால் வேண்டுமானால் திருப்தி அடையலாம்.

3 comments:

  1. சரியா சொன்னீர்

    ReplyDelete
  2. ஹா.. ஹா.. ஹா.. ஸூப்பர்

    ReplyDelete
  3. //ஏராளமான ஊழல் புகார்கள் காரணமாக ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா கொடுக்க வாய்ப்பில்லை என்று நிறைய பேர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.// அப்படி நம்பிகொண்டிருக்கும் நிறைய அப்பாவிகளுக்கு நானும் எனது அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.
    ஊழல், ஆணவ செயற்பாடுகள்,
    21ம் நூற்றாண்டில் உலகத்திலே தமிழகத்தில் காலில் விழும் அடிமைகள் கூட்டத்தை உருவாக்கிய சாதனை,
    ராம் மோகன்ராவ் போன்ற கொள்ளையர்களுக்கு பாதுகாப்பாக இருந்தமை போன்றவற்றால் இரும்பு பெண் என்றும். ஆளுமை கொண்ட தலைவி என்றும் பட்டம் கொடுத்தவர்களை மகிழ்வித்து கவர்வதற்காகவாது அரசு பாரத ரத்னா ஜெயலலிதாவிற்கு கொடுக்க கூடும்.
    //இப்போதைக்கு சசிகலாவிற்கு தரவில்லை என்றால் வேண்டுமானால் திருப்தி அடையலாம்.//
    நிலைமை அப்படி தான் போய்கொண்டிருக்கிறது.

    ReplyDelete