Wednesday, September 19, 2012

மகிழ்ச்சியில் சிலர்; துயரத்தில் பலர்







ஜி.ராமகிருஷ்ணன் மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்),


‘கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழு வதும் கணினி உபயோகம் பரவலாகியுள்ளது. 2001லிருந்து 2011 வரையிலான இந்த காலகட்டத்தில் 2 கோடியே 90 லட்சம் குடும் பங்கள் இரு சக்கர வாகனங்கள் வாங்கியிருக் கின்றன. சுமார் 4 கோடி குடும்பங்கள் குடிநீர் இணைப்பு பெற்றிருக்கின்றன. 3 கோடியே 70 லட்சம் குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றிருக்கின்றன’. - உலக வங்கியும் பன்னாட்டு நிதி நிறுவன மும் வரையறுத்துக்கொடுத்துள்ள நவீன தாராளமயக் கொள்கைகளை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டளைகளுக்கு ஏற்றவாறு இந்தியாவில் தொடர்ந்து அமல்படுத்தி வருவதன் விளைவாக ஏற்பட்டுள்ள “வளர்ச்சி யாக”, மேற்கண்ட விவரத்தை பெருமிதம் பொங்க வெளியிட்டிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை கட்டுப்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அந்நியக் கம்பெனிகள் நுழைவ தற்கு அனுமதி, விமானப் போக்குவரத்து, தகவல் ஒளிபரப்பு உள்ளிட்ட துறைகளில் அந்நியருக்கு தாராள அனுமதி, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் சூறை என நாடே கொந்தளித்துப்போகும் அளவிற்கு நாசகர முடிவுகளை அறிவித்துவிட்டு, இத்தகைய கொள்கையால் எப்படிப்பட்ட பிரம்மாண்டம் நிகழ்ந்திருக்கிறது பாருங்கள் என பரிதாப மான இந்தப் பட்டியலை தனது ‘டிவிட்டர்’ இணையப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் மாண்புமிகு பிரதமர். மக்கள் மீது தமது அரசு தொடுத்துள்ள யுத் தத்தை நியாயப்படுத்துவதற்காக, மேற்கண்ட “சாதனைப் பட்டியலை” வெளியிட்டிருக்கிறார். ஆனால் அந்தோ பரிதாபம்... இந்திய தேசத்தின் மொத்தக்குடும்பங்களின் எண்ணிக் கை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 33 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 767 என்பதை அவர் வசதியாக மறந்துவிட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு 2001ல் 19 கோடியே 19 லட்சத்து 63 ஆயிரத்து 935 ஆக இருந்த மொத்தக்குடும்பங்களின் எண்ணிக் கை, கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 


பிரதமர் சொல்கிற வளர்ச்சி, நாட்டின் மொத் தக்குடும்பங்களில் 10 சதவீத குடும்பங்களைக் கூட முழுமையாக சென்றடையவில்லை என் பதை அவரது கணக்கீடே பளிச்சென்று காட்டு கிறது. அர்ஜூன்சென் குப்தா குழு வெளியிட்ட கணக்கீட்டில் சொல்லப்பட்டதுபோல நாட்டின் 87 சதவீத மக்கள் துன்பதுயரத்தில், வறுமை யின் கோரப்பிடியில் உழன்று கொண்டிருக் கின்றனர் என்பதையும், பிரதமரின் மேற் கண்ட கருத்து மவுனமாக ஒப்புக்கொள்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசின் கேடுகெட்ட கொள் கைகளால் மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள யுத்தம், மேற்கண்ட 90 சதவீத ஏழை, எளிய உழைப்பாளி மக்களின் குடும்பங்கள் மீதான மிகக்கொடிய தாக்குதலாகும். ஏற்கெனவே கையில் கிடைக்கிற கொஞ்ச நஞ்சக் கூலியிலும் பெருமளவைப் பறித்துக் கொண்டிருக்கிற விலைவாசி உயர்வை, இவர்கள் அறிவித்திருக்கிற டீசல் விலை உயர்வு மேலும் கடுமையாக அதிகரிக்கும். ஆண்டு ஒன்றுக்கு 6 சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் கிடைக்கும் என்று கூறியி ருப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத கொடும் தாக்குதலாகும். ஏற்கெனவே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக் கப்பட்டுள்ள நிலையில், மேலும் கூடுதலாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500 வரை சுமை ஏற்றப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண் டர் கட்டுப்பாட்டால் கூட்டுக்குடும்பங்கள் எதிர் கொள்ளப்போகும் துயரத்தைச் சொல்லி மாளாது.ரூ.20 லட்சம் கோடி அளவிற்கு இந்தியா வில் பணம் புழங்குகிற ஒரு மாபெரும் துறை சில்லரை வர்த்தகம். நேரடியாக நான்கு கோடிக்கும் அதிகமான மக்களும், மறைமுக மாக சுமார் 20 கோடி மக்களும் என நாட்டின் 25 கோடி மக்களின் வாழ்க்கையோடு தொடர் புடைய சில்லரை வர்த்தகத்துறையை அந் நியக் கம்பெனிகள் சூறையாடுவதற்கு நாட்டின் கதவுகளை அகலத்திறக்கிறது மன்மோகன் சிங் அரசு.2008ம் ஆண்டில் உலகையே உலுக்கிய பொருளாதார நெருக்கடி அமெரிக்காவில் கருக்கொண்டு உலக நாடுகளையெல்லாம் தாக்கியபோது, இந்தியாவின் பொருளாதாரம் உறுதியாக நின்றது என மார்தட்டுகிறது மன் மோகன் அரசு. அப்படி நின்றதற்கு இந்த நாட் டின் மகத்தான பொதுத்துறை நிறுவனங்களே அடிப்படைக் காரணம். வங்கித்துறை உள் ளிட்ட நிதித்துறை நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக காலூன்றி பிரம்மாண்டமாக வளர்ச்சிபெற்று உறுதியுடன் நிற்கின்றன என்றால் இந்த நிறுவனங்களை பாதுகாத்திட்ட பெருமை இடதுசாரிக் கட்சிகளையே சாரும். 


ஆனால் இதைத்தகர்க்கும் விதமாக பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளையெல்லாம் உள்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகள் கொள்ளையடித்துச் செல்ல வழிவகுக்கிறது மன்மோகன் சிங் அரசு. இந்துஸ்தான் காப்பர், நால்கோ, ஆயில் இந்தியா, எம்எம்டிசி ஆகிய நான்கு மாபெரும் நிறுவனங்களின் பங்குக ளை பந்தி வைக்கிறது காங்கிரஸ் தலைமை யிலான அரசு. இதை நியாயப்படுத்துவதற்காக மீண்டும் மீண்டும், தங்களது கொள்கைகளால் நாட்டில் வளர்ச்சியும் சுபிட்சமும் ஏற்பட்டு அனைத்து மக்களும் மகிழ்ச்சிக்கூத்தாடுகிறார்கள் என பிரதமரும் அமைச்சர் பெருமக்களும் அறிக் கைவிட்டவண்ணம் இருக்கிறார்கள்.பிரதமர் கூறுவது போல மகிழ்ச்சிக் கூத் தாடுபவர்கள் வெகு சிலர். அவரது கொள்கை களால் துன்பத்தின் விளிம்பில் தள்ளப்பட்டி ருப்பவர்கள் மிகப்பலர்.வெகுசிலருக்கும், மிகப்பலருக்கும் இடையி லான போராட்டத்தில் எழுச்சியோடு வீறு கொண்டு எழுவீர் என அனைத்து உழைக்கும் மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது. அனைத்து தரப்பு உழைப்பாளி மக்கள், அனைத்துதரப்பு வணிகர்கள், சிறு, குறு முத லீட்டாளர்கள் என நாடே கொந்தளித்து எழ வேண்டிய நாள் செப்டம்பர் 20. அனைத்து இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிக ளும் முழு அடைப்பு - பொது வேலைநிறுத்தம் என களம் காண அழைப்பு விடுத்திருக்கும் நாள் செப்டம்பர் 20. தேசம் காக்கும் இந்தப்போராட்டத்தை மாபெரும் வெற்றிபெறச் செய்யுமாறு அனைத் துதரப்பு மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.


நன்றி - தீக்கதிர்

No comments:

Post a Comment