Friday, September 14, 2012

இந்தியனாய் பிறந்தது உன் தவறு

கல்லைத் தின்பாய்,
மண்ணைத் தின்பாய்,
மக்கிப் போன 
இலையைத்  தின்பாய்,
சாக்கடையில் ஓடும்
எலியைப் பிடித்து
அப்படியே தின்பாய்,
 காசிருந்தால்
கடைக்குச் சென்று
இத்தாலி நாட்டு 
பீட்சா தின்பாய்.


சோறு  தின்ன
அரிசியும் கிடைக்காது,
கூடவே தின்ன
காய்கறி கிடைக்காது.
பொங்கித் தின்ன
சிலிண்டரும் 
கிடையாது. 

காங்கிரஸ்காரன் என்றால்
சோனியா வீட்டுக்குச் செல்,
நிச்சயம் விருந்து
கண்டிப்பாய் உண்டு.

அடுத்தவனென்றால்
பட்டினியில் போயிடு.
இந்தியனாய் பிறந்தது
உன் தவறு.

இதைத்தானே சொல்கிறான்,
மன்மோகனும் சிதம்பரமும்.
வெட்கமின்றி
கேட்டுக் கொண்டே
இப்படியே எத்தனை நாள்
நொந்து வாழ்வாய்?

செங்கொடியின் கீழ் வா,
மனிதனாய் போராடுவோம்,
இந்தியாவை மாற்றியமைப்போம்.

No comments:

Post a Comment