Tuesday, August 26, 2025

அது கொலைகாரக் கூட்டம்யா அமித்து

 


துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா அணி சார்பில் போட்டியிடும் நீதியரசர் சுதர்ஷன் ரெட்டி, நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தவர் என்று பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளில் இளைய கூட்டாளி அமித்து சொல்லி வருகிறார்.

அதற்கு என்ன காரணம்?

"சல்வா ஜூடும்" என்ற அமைப்பை தடை செய்து அவர் தீர்ப்பளித்தார் என்பது குற்றச்சாட்டு.

சல்வா ஜூடும் என்பது ராணுவத்தின் பிரிவா?

மாநில காவல்துறையின் பிரிவா?

இல்லை மத்திய மாநில கூட்டுப்படையா?

மாநிலங்களின் கூட்டுப் படையா?

இல்லை.

இவை எதுவுமே இல்லை.

சத்திஸ்கர் மாநில பெரும் நிலவுடமையாளர்கள் உருவாக்கிய அடியாள் படை, கூலிப் படை

அவர்களின் முக்கிய இலக்கு மாவோயிஸ்டுகள் கிடையாது. பண்ணையார்களின் அராஜகத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், போராடும் தலைவர்கள் ஆகியோரைக் கொல்வதுதான். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தனிப் படை என்று சொல்லிக் கொள்வார்கள். அது வெறும் கூலிப்படை. அவ்வளவுதான். சத்திஸ்கர் மாநிலத்தில் இயங்கிய அடியாள் கூலிப்படையின் பெயர் சல்வா ஜூடும் என்றால் பீகாரில் இயங்கிய கூலிப்படையின் பெயர் "ரண்வீர் சேனா" 

இவைகள் எல்லாம் மக்களுக்கு எதிரானவை, ஜனநாயகத்திற்கு எதிரானவை.

சல்வா ஜூடுமிற்கு எதிரான வழக்கில் சுதர்சன் ரெட்டியும் இன்னொரு நீதிபதியும் (அவர் பெயர் தெரியவில்லை) " மக்களை பாதுகாப்பது என்பது  அரசின் வேலை. அதை அவுட்சோர்ஸிங் விட முடியாது" என்று சொல்லித்தான் தடை செய்துள்ளனர். அதை நக்சலைட் ஆதரவு என்று திசை திருப்புவது பாஜகவின் வழக்கமான சின்ன புத்தி.



No comments:

Post a Comment