Thursday, August 14, 2025

மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் முதல்வர்

 


என் பெயர் ஸ்டாலின், நான் ஒரு பாதி கம்யூனிஸ்ட் என்று முதல்வர் சொல்லலாம். அந்த மீதி முதலாளித்துவவாதிதான் தொழிலாளர்கள் பிரச்சினையில் செயல்படுகிறார் போல . . .

முதலில் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டம். கடுமையான போராட்டம் காரணமாக அந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டது.

அடுத்து சாம்சங் பிரச்சினையில் முதலாளியின் பிரதிநிதியாய் அரசின் அனைத்து இயந்திரங்களும் செயல்பட்டது. நீதிமன்ற உத்தரவு காரணமாக வேறு வழியின்றி சங்கம் பதிவு செய்யப்பட்டது.

இப்போது துப்புறவுப் பணியாளர்கள் பிரச்சினையில் தேவையற்ற ஈகோ காரணமாக தீர்வைக் காணாமல் போலீஸ் மூலம் அடக்குமுறையை ஏவி விட்டு உழைக்கும் மக்களின் கோபத்தை சம்பாதித்துள்ளார் முதல்வர். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

துப்புறவுப் பணியாளர்களுக்கு அதை செய்தோம், இதை செய்தோம் என்றெல்லாம் பட்டியல் போடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையாகும்.

மீண்டும் மீண்டும் செய்யும் தவறுகள் ஆட்சிக்கு மீண்டும் வருவதற்கு அவரே போடும் முட்டுக்கட்டைகள் என்று முதல்வர் எப்போது உணரப் போகிறாரோ?

திமுக தோல்வியைத் தவிர்க்க வேண்டுமென்றால் மைத்ரேயன் போன்ற ஆர்.எஸ்.எஸ் ஆட்களை சேர்ப்பதை தவிர்ப்பது மட்டுமல்ல, சேகர்பாபுவை தள்ளி வைப்பதும் மிக முக்கியம். 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete