Monday, August 25, 2014

சங்கரராமன் என்று யாருமே இல்லையாம்?????



சாமியார்கள் இந்த நாட்டின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் கொள்ளையடிக்கலாம், கொலை செய்யலாம், சல்லாப வேலைகளில் ஈடுபடலாம். அவர்கள் என்ன அக்கிரமம் செய்தாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது. உத்தமர் என்று நீதிபதிகள்  தீர்ப்பளிக்கும்படி சாட்சிகள் மிரட்டப்படுவார்கள், அல்லது  பல்டியடிக்க பணம் விளையாடும்.

மேல்முறையீடு  செய்ய அனுமதி அளித்தால் கவர்னர் பதவி நீக்கம் செய்யப்படுவார். மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரே  வலிந்து சொல்வார். 

இப்படி கோப்புக்களுக்குள் நீதியை குழி தோண்டிப் புதைப்பதற்குப் பதிலாக சங்கரராமன் என்று ஒரு மனிதர் கிடையவே கிடையாது. அப்படி ஒரு மனிதர் பிறக்கவேயில்லை. அதனால் அவர் கொல்லப்படவும் இல்லை என்று ஆணித்தரமாக சொல்லி விடலாமே...

சரி சங்கரராமனும் இந்துதானே? அவருக்கு நீதி கிடைக்க இந்துக்களின் ஏகப் பிரதிநிதி பாஜக வோ ஆர்.எஸ்.எஸ் கூட்டமோ பாடுபடாதா? சாமியார் இந்துவை விட சாமானிய இந்து மட்டமோ?

5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. People like you who make absurd comparison and that too hiding as an Anonymous are biggest shame. You don't have the right to talk. Go and hang yourself. You are an evil to to the society

      Delete
  2. Law and Order / Justice all comedy in india. (tragedy for affected people)
    I think sankar raman got killed him self.

    Seshan

    ReplyDelete
  3. What you say is true..Sound analysis. Keep it up

    ReplyDelete