Friday, August 29, 2014

தமிழகத்திற்கு புதிய முதல்வரா ? யார்?

பெங்களூர் சொத்து குவிப்பு வழக்கில்  ஜெ விற்கு தண்டனை கிடைக்குமா? அப்ப்டி கிடைத்தால்  தமிழகத்தின்  அடுத்த முதலமைச்சர் யார்?

இன்னும் இருபத்தி இரண்டு நாட்களில் தமிழகத்தில் பரபரப்பு காட்சிகள் அரங்கேற உள்ளது.

ஜெ தண்டனை பெற்றால் அடுத்த முதல்வர் யார் என்பது தொடங்கி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கலைஞர் கோரிக்கை முதல் நிறைய காட்சிகள் பார்க்கலாம்.

ஜெ விடுவிக்கப்பட்டால்  தர்மம் வென்றது என்று பிளெக்ஸ் பேனர்களையும் அதிமுக கொண்டாட்டங்களையும்  பார்க்கலாம். குடும்பப் பிரச்சினைகளை மறந்து விட்டு கலைஞரும் இது தொடர்பான அறிக்கைகளில் காலத்தைக் கடத்தலாம்.

வழக்கறிஞர்கள் வாதங்களை படிக்கையில் திமுக அரசு சொதப்பலாகவே வழக்கை பதிவு செய்துள்ளதாக தோன்றுகிறது.

பார்ப்போம் செப்டம்பர் இருபது  என்ன செய்தியோடு  வரப்போகிறது என்று.

ஓ.பி.எஸ் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் உள்மனதிற்குள் தமக்கு அதிர்ஷ்டம் அடிக்காதா என்ற ஆசை இருக்குமல்லவா?
 

2 comments:

  1. இது இந்தியா .
    இங்கு ஏழைக்கு என்ன கிடைக்குமோ அது அவர்களுக்கு கிடைக்கும்.
    பணக்காரர் களுக்கு என்ன கிடைக்குமோ அது அவர்களுக்கு கிடைக்கும்.
    இவர்களுக்கு சட்டம் தன் கடமையை செய்யும்.

    ReplyDelete