Monday, August 4, 2014

நெகிழ வைத்தது அந்தச் சிறுவனின் கண்ணீர்



உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் இறுதி ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இந்தக் காட்சியையும் கண்டிப்பாக கவனித்திருப்பார்கள்.

ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ஜெர்மனி ஒரு கோல் போட்டதுமே அர்ஜெண்டினா ரசிகர்கள் வருத்தத்தின் எல்லைக்கே சென்று விட்டார்கள். கண்ணீர் கடலில் துயரம் தோய்ந்த  முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவர்களின் ஒரு சிறுவனும் இருந்தான்.

அதிகபட்சம் ஆறிலிருந்து எட்டு வயதிருக்கலாம் அந்த சிறுவனுக்கு. கண்களில் நீர் வடிந்து கொண்டிருக்க, அவனுக்கு பின்னே நின்றவர் அவனை இழுத்து ஆறுதல் சொல்ல முயற்சிக்க வேகத்தோடு அந்த கைகளை தட்டி விட்டான். அவன் முகத்தில் இருந்த சோகத்தை வார்த்தைகளில் விவரிப்பது கடினம்.

அவன் கண்ணீரும் கைகளைத் தட்டி விட்ட சோகமும் இன்னும் மனதிலேயே நிற்கிறது. 





நீண்ட தேடலுக்குப் பின்பு அந்த காணொளிக் காட்சி நேற்றுதான் கிடைத்தது. அதன் இணைப்பு இங்கே அளித்துள்ளேன்  இந்த இணைப்பில் 28 வது நிமிடத்திலிருந்து பாருங்கள். தன் தேசம் தோற்கப் போகிறதே என்ற அச்சிறுவனின் ஏக்கத்தை நீங்களும் உணர்வீர்கள்.


6 comments:

  1. Aama adhae Argentina kadan'a thiruppi kataathathuku (credit default) yaarum azhala.

    ReplyDelete
  2. Very important msg.

    ReplyDelete
  3. Anonymous 1 & 2 இந்த சமுதாயத்திற்கு என்ன செய்தி சொல்ல வரீங்க?

    ReplyDelete
  4. unnaku ellathukum seithi venuma stupid thought

    ReplyDelete
  5. ஆமாம் திரு ராஜ், நல்ல பகிர்வு

    ReplyDelete
  6. Mr Anonymous, You are correct. You Stupids don't have any thoughts

    ReplyDelete